கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு செல்லும் பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு
சீரற்ற வானிலை காரணமாக கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு வரும் பயணிகள் 4 மணி நேரம் முன்னதாக வருகை தருமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
தற்போது நிலவி வரும் சீரற்ற வானிலை காரணமாக கட்டுநாயக்க விமான நிலையத்தின் பிரதான உள்நுழையும் பாதைகள் மற்றும் அதனைச் சுற்றியுள்ள சில வீதிகள் வெள்ள நீரில் மூழ்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
போக்குவரத்து நெரிசல்கள் மற்றும் தாமதங்கள்
இதனால் ஏற்படக்கூடிய போக்குவரத்து நெரிசல்கள் மற்றும் தாமதங்களைத் தவிர்க்கும் நோக்கில் இந்த விசேட அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.

இதற்காக கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலையை முடிந்தவரை பயன்படுத்துமாறும் விமான நிலையப்பொறுப்பு அதிகாரி அறிவுறுத்தியுள்ளார்.
ஆகவே பயணிகள் 4 மணித்தியாலங்களுக்கு முன்னர் விமான நிலையங்களுக்கு வருகை தருமாறும் கோரப்பட்டுள்ளது.