இரவு முதல் தற்காலிகமாக மூடப்பட்டுள்ள வீதி! பொலிஸார் விடுத்துள்ள அறிவிப்பு
பசறை – நமுனுகுல பிரதான வீதி, தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக நமுனுகுள பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த வீதியின் 12ஆம் மைல் தூணுக்கு அருகில் இரண்டு பெரிய மரங்கள் வீதியில் வீழ்ந்தமையினால் ஏற்பட்ட அபாயகரமான நிலைமை காரணமாக இன்று (13) இரவு முதல் அந்த வீதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.
எல்ல பல்லகெடுவ, நாவலகம, தெமோதர, உடுவர, ஹாலிஎல மற்றும் பதுளை ஊடாக மாற்று வீதியை பயன்படுத்துமாறு வாகன சாரதிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
வீதி புனரமைப்பு
இன்று (13) பிற்பகல் பெய்த கடும் மழை காரணமாக மரங்கள் முறிந்து விழுந்ததால் போக்குவரத்து முற்றாக ஸ்தம்பிதமடைந்துள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.
இரவில் விழுந்த மரங்களை அகற்றுவது மிகவும் ஆபத்தானது என்பதால், இரவு முழுவதும் சாலை மூடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், வீதி அபிவிருத்தி அதிகார சபையின் ஒத்துழைப்புடன் நாளை (14) மரங்கள் அகற்றப்பட்டு வீதி புனரமைக்கப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Super singer மேடையில் யாழ்ப்பாணத்து குயில்- இறுதிச்சுற்றிக்கான பாடலா? இமான் பதிலால் குஷியான அரங்கம் Manithan

தோட்டத்தில் புல் வெட்டியதற்காக வெளிநாட்டவருக்கு குடியுரிமை மறுப்பு: சுவிஸ் நீதிமன்றம் அதிரடி News Lankasri
