மட்டக்களப்பில் தேர்தல் சட்டத்தை மீறிய கட்சி ஆதரவாளர்கள் கைது
மட்டக்களப்பு ஆரையம்பதி பகுதியில் தேர்தல் சட்டத்தை மீறிய குற்றச்சாட்டில் தமிழர் விடுதலை கூட்டணி கட்சியின் ஆதரவாளர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
வேட்பாளர் ஒருவரின் தேர்தல் பிரச்சார சுவரெட்டிகளை ஒட்டிக் கொண்டிருந்த கட்சியின் ஆதரவாளர் இருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த சம்பவம் நேற்று(30.10.2024) இடம்பெற்றுள்ளது.
நீதிமன்றில் முன்னிலை
தேர்தல் சட்டத்தை மீறி ஆரையம்பதி பிரதான வீதியிலுள்ள சுவர்களில் அதிகாலை 4 மணிக்கு சுவரெட்டிகளை ஒட்டிக் கொண்டிருந்தபோதே இருவரையும் கைது செய்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதில் கைது செய்யப்பட்டவர்கள் தமிழர் விடுதலை கூட்டணி கட்சின் ஆதரவாளர்கள் எனவும் பொலிஸார் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இந்நிலையில் இவர்களிடம் இருந்து நூற்றுக்கு மேற்பட்ட சுவரெட்டிகளை கைப்பற்றியதுடன் கைதானவர்களை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





16 ஆண்டுகால ஐ.நா மைய அரசியல்: பெற்றவை? பெறாதவை...... 7 மணி நேரம் முன்

7ஆம் அறிவு படத்தில் வில்லனாக நடித்த இந்த நடிகரை நினைவிருக்கிறதா? இப்போது எப்படி இருக்கிறார் தெரியுமா, இதோ பாருங்க Cineulagam

அதிக வருமான வரி செலுத்திய இந்திய திரையுலக பிரபலங்கள்.. லிஸ்டில் இடம்பிடித்த ஒரே ஒரு தமிழ் நடிகர்! யார் தெரியுமா? Cineulagam

சித்திரவதை செய்யப்பட்டு கடலில் தூக்கி எறியப்பட்ட புலம்பெயர்ந்தோர்: அதிரவைக்கும் ஒரு செய்தி News Lankasri
