பாணந்துறையில் ஒரே நேரத்தில் இடிந்து விழுந்த ஐந்து இரண்டுமாடிக்கட்டிடங்கள்
களுத்துறை - பாணந்துறை நகரின் பிரபலமான வீதியில் வரிசையாக அமைந்துள்ள 05 பழைய இரண்டுமாடிக் கட்டிடங்கள் இன்று (30) பிற்பகல் ஒரே நேரத்தில் இடிந்து வீழ்ந்துள்ளன.
குறித்த பகுதியின் வீதியின் இருபுறங்களிலும் வடிகால் அமைப்பு தயாரிப்பதற்காக மாநகர சபையினால் ஒப்பந்ததாரர் ஒருவர் நியமிக்கப்பட்டு, இன்று (30) பிற்பகல் முதல் பெக்ஹோ இயந்திரத்தின் உதவியுடன் வடிகால்கள் தயார் செய்யப்பட்டு வருகின்றன.
நில அதிர்வு
இந்நிலையில், பெக்ஹோ மற்றும் மண் நிரப்பப்பட்ட லொறி ஆகிய கனரக வாகனங்கள் அவ்விடத்திலிருந்து வெளியேறியவுடன், குறித்த கட்டிடங்கள் ஒரே நேரத்தில் இடிந்து விழுந்துள்ளன.
பெக்ஹோ இயந்திரத்தால் ஏற்பட்ட அதிர்வே விபத்துக்கு காரணமாக இருக்கலாம் என சந்தேகம் எழுப்பப்பட்டுள்ளது.
மேலும், ஐந்து கட்டிடங்களின் கீழ் தளங்களில் பல் அறுவை சிகிச்சை மற்றும் ஒரு ஜவுளி கடை உள்ளிட்ட பல வர்த்தக நிலையங்கள் இருந்துள்ள நிலையில் அவை முற்றிலும் சேதமாகியுள்ளன.
அத்துடன், விபத்தின் போது அந்த ஐந்து வர்த்தக நிலையங்களில் இரண்டு மாத்திரமே திறந்திருந்ததாகவும் ஏனைய மூன்றும் மூடப்பட்டிருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளதுடன், விபத்தின் போது நபர்கள் யாருக்கும் சேதம் ஏற்படவில்லை எனவும் தகவல் வழங்கப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |

உள்ளூராட்சி தேர்தலில் விழிப்படைந்த சிறுபான்மை சமூகம் 11 மணி நேரம் முன்

இந்தியாவால் கொல்லப்பட்ட பயங்கரவாதிகள் இறுதிச்சடங்கில் கவனம் ஈர்த்த நபர்... யாரிந்த அப்துல் ரவூஃப் News Lankasri

இந்த ராசியில் பிறந்தவர்கள் புலி போல் பதுங்கி இருந்து வேலைப்பார்ப்பார்களாம்.. நீங்க என்ன ராசி? Manithan

சரிகமப Li'l Champs சீசன் 4 திவினேஷ் ஆசையை நிறைவேற்றிய பாடகர் ஸ்ரீநிவாஸ்.. சந்தோஷத்தில் குடும்பம் Cineulagam

மிக மோசமான அணு ஆயுதப் போராக வெடித்திருக்கும்... தடுத்து நிறுத்தினேன்: ட்ரம்ப் பேச்சால் சர்ச்சை News Lankasri
