அரசியல் எழுச்சிக்கு தயாராகும் மிகப் பெரிய கட்சி? - கொழும்பு ஊடகம் தகவல்
அடுத்த அரசியல் எழுச்சியை ஒரு பெரிய அரசாங்கக் கட்சி வழிநடத்தும் என்று கொழும்பு அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதன்படி, ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பை மீண்டும் செயல்படுத்துவதற்கும் ஒரு பரந்த அரசியல் முகாமை உருவாக்குவதற்கும் திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கூட்டணி அமைக்க இதுவரை சுமார் 12 கட்சிகள் ஒப்புக்கொண்டுள்ளதாக அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
மைத்திரிபால சிறிசேனவை பொது வேட்பாளராக்குவதற்கு பாடுபட்ட 49 சிவில் சமூக அமைப்புகளில் 40 ஏற்கனவே ஒப்புதல் வழங்கியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
எவ்வாறாயினும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணிக்கு மட்டுமல்ல, மக்கள் முன்னணிக்கும் அதிகாரம் அளிக்க முடிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிங்கள ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
எந்த சாக்குபோக்கும் சொல்ல முடியாது: பாகிஸ்தானுக்கு எதிராக படுதோல்வி குறித்து இலங்கை கேப்டன் News Lankasri
பாண்டியன் குடும்பம் மீது பொய் புகார் அளித்த மயில் அம்மாவுக்கு நேர்ந்த கதி... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் போட்டோ Cineulagam
இராணுவத்திற்கு என 1.5 டிரில்லியன் டொலர் ஒதுக்க திட்டமிடும் ட்ரம்ப்: கடும் அபாய நிலையிலா அமெரிக்கா? News Lankasri