சுவிற்சர்லாந்தில் இந்துக்களின் அஸ்தியை கரைப்பதற்கு அனுமதி
சுவிட்சர்லாந்தில் நீண்ட நாட்களாக எமது சமுதாயத்தில் சிவபதமடைந்தவர்களுக்கு , அவர்களுடைய அஸ்தியை ஆற்றில் அல்லது ஓர் நீர் நிலையில் இடுவதற்கு பல சிரமங்கள் இருந்து வந்த நிலையில் தற்போது அதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
அது தொடர்பில் கடந்து மூன்று வருடங்களாக Lausanne Municipalité இனால் , இது சம்பந்தமான பல commissions களில் கலந்து சைவ மக்களின் முக்கிய கடமைகளில் ஒன்றான அஸ்தி கரைத்தல் சடங்கு முறைகளை செயற்படுத்துவதற்கு அனுமதி கிடைத்துள்ளது.
கடந்த சனிக்கிழமை (25) காலை அஸ்தி இடும் TALENT என்ற ஆற்றின் பகுதி அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டுள்ளது.
சம்பிரதாயபூர்வமான முறையில் Le conseiller municipal Monsieur Pierre -Antoine Hildbrand தலைமையில் இந்த இடம் கையளிக்கப்படவுள்ளதாகவும் கூறப்படுகின்றது.
அமைச்சர் Pierre-Antoine Hildbrand மற்றும் மாநகர சபையின் மூத்த உறுப்பினர் தம்பிப்பிள்ளை நமசிவாயம் ஆகியோரிடம் அஸ்தி இடும் TALENT என்ற ஆற்றின் பகுதி சம்பிரதாய முறைப்படி கையளிக்கப்பட்டுள்ளது.
சிவஶ்ரீ தண்டாயுதபாணி சடான்ன சர்மா அவர்களால் பூசைகள் செய்யப்பெற்று ஆசீர்வதிக்கப்பட்ட பின்னர் இந்த வைபவம் நடைபெற்றுள்ளது.