சர்வகட்சி அரசாங்கத்துக்கு பதிலாக முன்னாள் அரசாங்கமே மீண்டும் ஆட்சியில்! மைத்ரிபாலவின் அதிருப்தி!
ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் அனுமதியின்றியே தமது உறுப்பினர்கள் சிலர், இன்று அமைச்சுக்களை பொறுப்பேற்றுள்ளதாக கட்சியின் தலைவர் மைத்ரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்
தமது கட்சி, அரசாங்கத்தின் சிறந்த செயற்திட்டங்களுக்கு ஆதரவளிக்க முன்வந்திருந்தது.
அமைச்சரவையில் பங்கேற்ற தீர்மானம் எடுக்கவில்லை இந்தநிலையில் கட்சியின் தீர்மானத்துக்கு எதிராக சிலர், அமைச்சு பதவிகளை பெற்றுக்கொண்டதாக மைத்ரிபால குறிப்பிட்டார்.
முன்னதாக நாட்டை கட்டியெழுப்ப, சர்வக்கட்சி அரசாங்கத்தை அமைப்பதாக கூறப்பட்டது.
எனினும் இன்று அந்த கொள்கை மாற்றப்பட்டு, முன்னர் இருந்த அரசாங்கமே மீண்டும் ஆட்சியை நடத்துவதை காணமுடிகிறது என்று அவர் சுட்டிக்காட்டினார்.