முள்ளிவாய்க்கால் நிகழ்வுகளுக்கு மட்டக்களப்பில் பொலிஸ் இடையூறு! சாணக்கியன் ரணிலிடம் முறையீடு (Video)
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகள் மட்டக்களப்பில் நடைபெற்று வருகின்ற நிலையில், அதனை தடுக்கும் பணிகளில் பொலிஸார் ஈடுபட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இன்று நாடாளுமன்றில் முறையிட்டார்.
இது தொடர்பில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலையீடு செய்யவேண்டும் என்று அவர் கோரிக்கை விடுத்தார்.
முள்ளிவாய்க்கால் நிகழ்வுகள் இன்று காலிமுகத்திடலிலும் இடம்பெறுகின்ற நிலையில் மட்டக்களப்பில் அதற்கு பொலிஸாரால் இடையூறு விளைவிக்கப்படுவதாக அவர் குறிப்பிட்டார்.
ஏற்கனவே அமைதியான நினைவேந்தல்களுக்கு இடமுள்ளதாக ரணில் விக்கிரமசிங்க குறிப்பிட்டுள்ள நிலையில் இது இடம்பெறுவதாக அவர் சுட்டிக்காட்டினார்.