ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் நாளை நாடாளுமன்றில் விவாதம்
அரசியல் சாசனத்தின் பிரகாரம் உரிய காலத்தில் ஜனாதிபதி தேர்தலை நடாத்துவது குறித்து நாளைய தினம் நாடாளுமன்றில் அவை ஒத்தி வைப்பு விவாதம் நடத்தப்பட உள்ளது.
இந்த விவாதத்திற்கு கட்சித் தலைவர்கள் அனைவரும் இணக்கம் வெளியிட்டுள்ளதாக நாடாளுமன்ற தொடர்பாடல் பிரிவு தகவல் வெளியிட்டுள்ளது.
ஜனாதிபதி தேர்தல்
அரசியல் சானத்தின் பிரகாரம் எதிர்வரும் செப்டம்பர் மாதம் 17ம் திகதி முதல் ஒக்ரோபர் மாதம் 16ம் திகதிக்குள் ஜனாதிபதி தேர்தல் நடத்தப்பட வேண்டும்.

சபாநாயகர் மகிந்த யாபா அபேவர்தன தலைமையில் கூடிய கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் நாடாளுமன்ற விவாதம் நடத்துவதற்கு இணக்கம் காணப்பட்டுள்ளது.
குறிப்பாக ஜனாதிபதி தேர்தல் நடத்தப்படும் கால வரையறை தொடர்பில் நாளை அவை ஒத்தி வைப்பு விவாதம் நாடாளுமன்றில் நடைபெறவுள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
எல்லோரும் அஜர், சேரன் மட்டும் வரவில்லை, பல்லவன் செய்த காரியம், கடைசியில்... அய்யனார் துணை சீரியல் புரொமோ Cineulagam
உடம்பு முடியாமல் இருப்பவரை பார்த்து கிண்டல் செய்த பாண்டியன், கோபத்தில் கோமதி... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 Cineulagam
நெருக்கடியில் உதவாத ஐரோப்பிய நாடுகள்... உக்ரைன் தொடர்பில் அதிர்ச்சி முடிவெடுத்த ட்ரம்ப் News Lankasri