மூன்றாவது நாளாகவும் விசாரணை செய்யப்பட்ட அருட் தந்தை சிறில் காமினி
மூன்றாவது நாளாக, அருட்தந்தை சிறில் காமினி பெர்னாண்டோ குற்றப் புலனாய்வுத்துறையில் வாக்குமூலம் வழங்கியுள்ளார்.
சுமார் ஐந்து மணித்தியாலங்கள் வாக்குமூலத்தைப் பதிவு செய்ததன் பின்னர் அவர் இன்று குற்றப் புலனாய்வுப் பிரிவில் இருந்து வெளியேறினார்
இலங்கையின் அரச புலனாய்வுப் பிரிவின் தலைவரால் செய்யப்பட்ட முறைப்பாடு தொடர்பில் வாக்குமூலத்தை வழங்குவதற்காக அவர், இதற்கு முன்னர் நவம்பர் 15 மற்றும் 16 ஆகிய திகதிகளில் இரண்டு தடவைகள் குற்றப் புலனாய்வுப் பிரிவில் முன்னிலையாகியிருந்தார்.
ஒக்டோபர் 23 ஆம் திகதியன்று, உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து வெளிநாட்டில் வாழும் இலங்கை சமூகத்திற்கு விளக்கமளிக்கும் வகையில் இடம்பெற்ற இணையத்தள மாநாடு ஒன்றில், அருட்தந்தை சிறில் காமினி உட்பட்டவர்கள், அரச புலனாய்வுத்துறையின் தலைவர் சுரேஸ் சாலி ,தேசிய தவ்ஹீத் ஜமாத் (NTJ) தலைவர் சஹ்ரான் ஹாஷிமுக்கு நிதி மற்றும் பிற உதவிகளை வழங்கியதாக குற்றம் சுமத்தினார்.
இந்த குற்றச்சாட்டை மறுத்த சுரேஸ் சாலி, இது தொடர்பில் விசாரணை செய்யப்படவேண்டும் என்று கோரி குற்றப்புலனாய்வு துறையில் முறைப்பாட்டை செய்திருந்தார்.
இதன் அடிப்படையிலேயே, அருட் தந்தை சிறில் காமினியிடம் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது.




அரசியல்வாதிகள் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் மறைத்துவைத்துள்ள கோடிக்கணக்கான பணம் - எடுக்கப்பட்டுள்ள அதிரடி நடவடிக்கை
ஹோர்முஸ் நீரிணையில் செல்லும் கப்பல்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை - வீழ்த்தப்பட்ட 8 அமெரிக்க தளங்கள்
ஹரக் கட்டா பணம் வழங்கிய பட்டியலில் பெரும் புள்ளிகளின் பெயர்கள்! இலங்கை வரலாற்றில் பதிவாகவுள்ள பெரும் சம்பவம்
கொளுத்தும் வெயில்... பச்சிளம் குழந்தைகளைக் காப்பாற்ற பிரித்தானியப் பெற்றோர்கள் எடுத்த முடிவு News Lankasri
TRP-ல் மட்டுமில்லை, இதிலும் அய்யனார் துணை தான் நம்பர் 1, அடுத்தடுத்து எந்த சீரியல்கள் உள்ளன தெரியுமா Cineulagam