மீண்டும் இன்று ஒன்றுகூடும் பொதுநிதி தொடர்பான நாடாளுமன்ற குழு
அரசாங்க பொதுநிதி தொடர்பான நாடாளுமன்ற உப குழு இன்று (21.03.2023) மீண்டும் கூடவுள்ளது.
இந்நிலையில் அரசாங்க பொதுநிதி தொடர்பான குழு நேற்று (20.03.2023) தற்காலிக தலைவர் ஒருவரின் கீழ் கூடியுள்ளது.
இதற்கமைய இன்று கூடவுள்ள கூட்டத்தின் போது நிறைவேற்ற முடியாமற் போன சில சட்டமூலங்களை மீள்பரிசீலனை செய்ய தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
புதிய தலைவரை தேர்ந்தெடுத்தல்
இதேவேளை, 09வது நாடாளுமன்றத்தின் நான்காவது அமர்விற்கான பொது மனுக்கள் மீதான குழு இன்று (21.03.2023) முதல் தடவையாக கூடவுள்ளது. இதற்கான புதிய தலைவர் இன்று (21.03.2023) தேர்ந்தெடுக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.