நாடாளுமன்றத்தில் சிறப்பு பாதுகாப்பு ஆய்வு - சபாநாயகர் விடுத்துள்ள உத்தரவு
நாடாளுமன்றம் சிறப்பு பாதுகாப்பு ஆய்வுக்கு உட்படுத்தப்படவுள்ளதாக சபாநாயகர் வைத்திய கலாநிதி ஜகத் விக்ரமரத்ன இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
அதற்கமைய, அடுத்த மாதம் 4, 6 மற்றும் 7 ஆகிய மூன்று நாட்களில் இந்த ஆய்வு மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.
உறுப்பினர்களின் ஓய்வறைகள் மற்றும் அலுமாரிகள் உட்பட முழு நாடாளுமன்ற கட்டடமும் பாதுகாப்பு ஆய்வுக்கு உட்படுத்தப்படும் என சபாநாயகர் குறிப்பிட்டுள்ளார்.
உயர் பாதுகாப்பு பகுதி
நவம்பர் மாதம் 7ஆம் திகதி நாடாளுமன்ற கட்டடத்தின் உயர் பாதுகாப்பு பகுதிகளும் பாதுகாப்பு ஆய்வுக்கு உட்படுத்தப்படும். அன்றையதினம் விருந்தினர்களுக்கு மட்டுமே பொது கேலரி அனுமதிக்கப்படும் என சபாநாயகர் கூறினார்.

விருந்தினர்களுக்கான அழைப்பிதழ்கள் நிதி அமைச்சினால் வழங்கப்படும். மேலும் சிறப்பு பாதுகாப்பு திட்டம் அமலில் இருக்கும் வெள்ளிக்கிழமை நாடாளுமன்றத்திற்கு வாகனங்களில் வருகை தரும் போது நாடாளுமன்ற உறுப்பினர்கள் சாரதியுடன் வர வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சபாநாயகர் அறிவிப்பு
அன்று நாடாளுமன்ற வாகன நிறுத்துமிடம் மூடப்படும் என்பதால், நாடாளுமன்ற உறுப்பினர்கள் வரும் வாகனங்கள் வாகன நிறுத்துமிடத்திற்கு அனுப்பப்படும் என சபாநாயகர் தெரிவித்தார்.

அன்றைய தினம் சிறப்பு போக்குவரத்துத் திட்டமும் செயல்படுத்தப்படும் என்று சபாநாயகர் மேலும் தெரிவித்துள்ளார்.
யாரிந்த பீற்றர் எல்பர்ஸ்... IndiGo தலைமை நிர்வாக அதிகாரியின் சம்பளம், சொத்து மதிப்பு எவ்வளவு News Lankasri
ரயிலில் பிச்சை எடுத்த பெண்ணை திருமணம் செய்து கொண்ட இளைஞர்: பெற்றோர்களுக்கு குவியும் பாராட்டு News Lankasri