தேசிய சபையின் நியமனங்கள் தொடர்பில் நாடாளுமன்றில் சபாநாயகர் அறிவிப்பு (Video)
நாடாளுமன்ற அங்கீகாரத்தை பெற்ற தேசிய சபையின் நியமனங்கள் தொடர்பில் சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்த்தன இன்றைய தினம் (23.09.2022) நாடாளுமன்றில் அறிவித்தல் ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்த வகையில் சபாநாயகர் தேசிய சபையின் தலைவராக செயற்படுவதுடன், பிரதமர், அவைத்தலைவர், எதிர்கட்சி தலைவர், அரசாங்கக்கட்சியின் பிரதம அமைப்பாளர் ஆகியோருடன் கட்சிகளின் பிரதிநிதிகள் இந்த தேசிய சபையில் செயற்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, டக்ளஸ் தேவானந்தா, நஸீர் அஹமட், சிசிர ஜெயகொடி ஜோன்ஸ்ட்ன் பெர்ணான்டோ, டிரான் அலஸ், சிவநேசத்துரை சந்திரகாந்தன், ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ, பவித்ரா வன்னியாராச்சி, வஜிர அபேவர்த்தன, ஏ.எல்.எம்.அத்தாவுல்லாஹ், திஸ்ஸ விதாரன, ரவூப் ஹக்கீம், ரிசாத் பதியுதீன், விமல் வீரவன்ச, உதய கம்மன்பில, பழனி திகாம்பரம், மனோ கணேசன் ரோஹித்த அபேகுணவர்த்தன, நாமல் ராஜபக்ச, அலி சப்ரி ரஹீம், ஜீவன் தொண்டமான், கஜேந்திரகுமார் பொன்னம்பலம், அத்துரலியே ரத்தன, அசங்க நவரட்ன, சி.வி விக்னேஸ்வரன் மற்றும் சாகர காரியவசம் ஆகியோர் இந்த சபையில் செயற்படுவதாக சபாநாயகர் அறிவித்துள்ளார்.

முதலாம் இணைப்பு
நாடாளுமன்ற அமர்வு இன்று முற்பகல் 09.30 மணிக்கு ஆரம்பமாகியுள்ளது.
முற்பகல் 09.30 மணி முதல் பிற்பகல் 12.30 மணி வரை மகாராணி இரண்டாம் எலிசபெத்தின் மறைவு மீதான அனுதாபப் பிரேரணை இடம்பெறவுள்ளது.
அதனையடுத்து, பிற்பகல் 1 மணி முதல் பிற்பகல் 5.30 மணிவரை ஒன்பதாவது நாடாளுமன்றத்தின் நாடாளுமன்ற உறுப்பினர் மறைந்த கௌரவ அமரகீர்த்தி அதுகோரள மீதான அனுதாபப் பிரேரணையின் தொடர்ச்சி இடம்பெறவுள்ளது.
சிதைக்கப்பட்ட 10,000க்கும் மேற்பட்ட இலக்குகள்: நிலைகுலைந்து நிற்கும் ஈரான்: அமெரிக்கா தகவல் News Lankasri
Tamizha Tamizha: உடல் பருமனை விரும்பி திருமணம் செய்த கணவர்! நாளடைவில் கணவனால் அனுபவிக்கும் கொடுமை Manithan
அய்யனார் துணை சீரியலில் அடுத்து நடக்கப்போகும் ஸ்பெஷல் கொண்டாட்டம்... படப்பிடிப்பு தள போட்டோ Cineulagam
30 ஆண்டுகள் கழித்து உருவாகும் திரிகிரக யோகம்: ஏப்ரலில் இந்த ராசிகளுக்கு ராஜ வாழ்க்கை உறுதி! Manithan
ரயில் நிலையத்தில் படுத்துறங்கிய லாரி ஓட்டுநர் மகன் - RCB அணியின் நம்பிக்கை நட்சத்திரம் News Lankasri