இன்றைய தினத்திற்கான நாடாளுமன்ற அமர்வு சற்றுமுன் ஆரம்பம் (Live)
நாடாளுமன்ற அமர்வு இன்று (22.09.2022) முற்பகல் 09.30 மணிக்கு ஆரம்பமாகியுள்ளது.
முற்பகல் 09.30 மணி முதல் முற்பகல் 10.30 மணி வரை வாய்மூல விடைக்கான வினாக்களுக்காக நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.
முற்பகல் 10.30 மணி முதல் பிற்பகல் 12.30 மணி வரை,
- இலங்கைத் தொலைக்காட்சிக் கூட்டுத்தாபனம் (திருத்தச்) சட்டமூலம் - இரண்டாம் மதிப்பீடு
- சிவில் விமான சேவைகள் சட்டத்தின் கீழ் ஒழுங்குவிதிகள் விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளன.
அதனைத் தொடர்ந்து பிற்பகல் 1 மணி முதல் பிற்பகல் 4.30 மணி வரை நாடாளுமன்ற நிலையியற் கட்டளைகளைத் திருத்துவது தொடர்பான விதப்புரை விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.
அதனை அடுத்து, பிற்பகல் 4.30 மணி முதல் பிற்பகல் 4.50 மணிவரை சபை ஒத்திவைப்பு நேரத்தின் போதான கேள்விகளுக்காக நேரம் ஒதுக்கப்பட்டிருப்பதுடன், பிற்பகல் 4.50 மணி முதல் பிற்பகல் 5.30 மணிவரை எதிர்க் கட்சியினால் கொண்டுவரப்படும் பிரேரணைக்கு அமைய சபை ஒத்திவைப்பு நேரத்தின் போதான விவாதம் நடைபெறும்.
உண்மையை மறைத்த கோமதி-மீனாவிற்கு, பாண்டியன் செந்தில் கொடுத்த தண்டனை... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் Cineulagam
தங்கம் முதல் வெள்ளி நாணயம் வரை…ஜேர்மனியில் 2000 ஆண்டுகள் பழமையான புதையல் கண்டுபிடிப்பு News Lankasri