நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் இதுவரையில் கைத்துப்பாக்கியை பெற்றுக்கொள்ளவில்லையென தகவல்
நாடாளுமன்றிற்கு புதிதாக தெரிவாகியுள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களில் பலர் இதுவரையில் கைத்துப்பாக்கியை பெற்றுக் கொள்ளவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.
பாதுகாப்பு அமைச்சினால் நாடாளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாப்பிற்காக கைத்துப்பாக்கி வழங்கப்படுகின்றது.
இவ்வாறு வழங்கப்படும் கைத்துப்பாக்கியை புதிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலர் இதுவரையில் பெற்றுக்கொள்ளவில்லை என கூறப்படுகிறது.
ஆளும் மற்றும் எதிர்க்கட்சிகளின் புதிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் இவ்வாறு கைத்துப்பாக்கிகளைப் பெற்றுக்கொள்ளவில்லை என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இதேவேளை நீண்ட காலம் நாடாளுமன்ற உறுப்பினராக அங்கம் வகிக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்த கைத்துப்பாக்கியைக் பெற்றுக் கொண்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.