வடக்கு கிழக்கில் உள்ள இராணுவ சின்னங்களை உடன் அகற்றுங்கள் : சிறீதரன் கோரிக்கை

Sri Lankan Tamils Parliament of Sri Lanka S. Sritharan Maaveerar Naal
By Benat Nov 24, 2023 10:00 PM GMT
Report

புதிய இணைப்பு

வடக்கு கிழக்கில் உள்ள இலங்கை இராணுவத்தினரின் சின்னங்களை உடனடியாக அகற்ற வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

தமிழர் தாயகத்தில் இலங்கையை தாங்கி நிற்கும் வலிந்த கரங்கள் ஒருபுறமும், இராணுவச் சிப்பாய் ஒருவரின் இராணுவச் சீருடையுடனான உருவச்சிலை ஒருபுறமும் நிறுவப்பட்டுள்ளது.

வடக்கு கிழக்கில் உள்ள இராணுவ சின்னங்களை உடன் அகற்றுங்கள் : சிறீதரன் கோரிக்கை | Parliament Member Shritharan Speech

தமிழர்களின் பூர்வீக மண்ணை ஆக்கிரமித்து, நூறு வீதம் தமிழ் மக்களின் புழக்கம் செறிவாக உள்ள தமிழர் தாயகப் பகுதிகளின் பெருநகரங்களிலும், பிரதான வீதிகளிலும் ஏராளமான போர் வெற்றிச் சின்னங்கள் நிரந்தரமாக நிறுவப்பட்டுள்ளன.

குறிப்பாக கிளிநொச்சி நகர மத்தியில், டிப்போச்சந்திக்கும் கிளிஃகிளிநொச்சி மத்திய மகா வித்தியாலயத்துக்கும் அருகேயுள்ள சந்திரன் பூங்கா வளாகத்தில், தமிழர்களின் இதயங்களைத் துளைத்து உள்நுழைவதான தோற்றப்பாட்டை வெளிப்படுத்தும், துப்பாக்கிச் சன்னம் ஒன்றுடனான போர் வெற்றிச் சின்னமும், ஆனையிறவுப் பகுதியில் A.9 பிரதான வீதியின் இருமருங்கும், இருவேறு போர் வெற்றிச் சின்னங்கள் நிறுவப்பட்டுள்ளன. 

வடக்கு கிழக்கில் உள்ள இராணுவ சின்னங்களை உடன் அகற்றுங்கள் : சிறீதரன் கோரிக்கை | Parliament Member Shritharan Speech

முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்புப் பிரதேசத்தில் A.35 பிரதான வீதியின் ஒருமருங்கில், ஆயுதம் தரித்த இராணுவச் சீருடை, சிங்கக்கொடி, துப்பாக்கி என்பவற்றை ஏந்தியவாறு வெற்றிக்களிப்பில் மிதக்கும் இராணுவச் சிப்பாய் ஒருவரது உருவச்சிலை நிறுவப்பட்டிருக்கிறது.

அடிப்படை உரித்துக்கோரிப் போராடிய ஒரு இனத்தைத் தோற்கடித்துவிட்டோம் என்கிற மமதையையும், போரின் குரூரத்தையும், படையினரது ஆக்கிரமிப்புச் சிந்தையையும் முகத்திலறைந்தாற்போல் பிரதிபலிக்கும் ஆயுத கலாசார நினைவுச்சின்னங்கள் சீர்குலைக்காத இன நல்லிணக்கத்தை, அவை நினைவுபடத்தாத போரியல் உணர்வுகளை, நினைவேந்தல் உரித்தை நிலைநாட்டுவதற்காக அமைத்த துயிலும் இல்ல முகப்புகள் சீர்குலைக்கும் என்று சிந்திப்பதுகூட ஆக்கிரமிப்பின் அதியுச்ச வெளிப்பாடாகவே தென்படுகிறது என குறிப்பிட்டுள்ளார்.

வடக்கு கிழக்கில் உள்ள இராணுவ சின்னங்களை உடன் அகற்றுங்கள் : சிறீதரன் கோரிக்கை | Parliament Member Shritharan Speech

முதலாம் இணைப்பு

ஈழத்தமிழர்களின் நெடுங்கால மரபுகளின்வழி இம்முறையும், இனிவரும் காலங்களிலும் எமது உறவுகள் புதைக்கப்பட்ட இடங்களுக்குச் சென்று விளக்கேற்றி, கண்ணீர் சிந்தி, வழிபடுவதன் மூலம் எங்களைத் நாங்களே ஆற்றுப்படுத்திக் கொள்கின்ற நினைவேந்தல் நிகழ்வுகளை, இராணுவத் தலையீடுகளோ, பொலிசாரின் அச்சுறுத்தல்களோ அற்று அமைதியான வழியில் கடைப்பிடிப்பதற்கு வழிவகை செய்வதன்மூலம் இந்த நாட்டில் இன நல்லிணக்கத்தை ஏற்படுத்த முன்வாருங்கள் என்று சிங்கள இளையோரை முன்னிறுத்தி நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் கோரிக்கை விடுத்துள்ளார்.

இன்றையதினம் (24) நடைபெற்ற நாடாளுமன்ற அமர்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்வடவாறு குறிப்பிட்டார். 

பாடசாலைகளின் டிசம்பர் மாத விடுமுறை தொடர்பில் கல்வி அமைச்சர் வெளியிட்ட தகவல்

பாடசாலைகளின் டிசம்பர் மாத விடுமுறை தொடர்பில் கல்வி அமைச்சர் வெளியிட்ட தகவல்

தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

2015 ஆம் ஆண்டு ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் கொண்டுவரப்பட்ட நிலைமாறுகால நீதிப் பொறிமுறையை இலங்கை அரசு ஏற்றுக்கொண்டதற்கமைய, ஈழத்தமிழர்கள், இனவிடுதலைக்காக உயிர்துறந்த தமது பிள்ளைகள் விதைக்கப்பட்ட விளைநிலங்களான துயிலும் இல்லங்களுக்குச் சென்று நினைவேந்தும் உரிமையை நிலைநிறுத்தத் தொடங்கியிருந்தார்கள்.


ஆனால், தமது உறவுகளை இழந்து துயரடைகின்ற நெஞ்சம் எவ்வாறு இருக்கும் என்பதை உணரத்தலைப்படாத அதிகாரக் கரங்கள், அடிப்படை மனிதாபிமான உணர்வுகளைக்கூடப் புறந்தள்ளி இன்னுமின்னும் எங்கள் மக்களை வஞ்சிக்கும் செயற்பாட்டையே மிகக் கச்சிதமாக மேற்கொண்டு வருகின்றன.

இனி ஒருபோதும் போரொன்றை விரும்பாத எமது மக்கள், பயங்கரவாதம் எனப்படுகின்ற இயல்புகளுக்கு ஒத்திசையாத வகையில் தங்களின் பிள்ளைகளை, அவர்கள் புதைக்கப்பட்ட நிலங்களில் சென்று வழிபடுவதற்கும், விளக்கேற்றுவதற்கும், கண்ணீர்விட்டு அழுவதற்குமான சந்தர்ப்பங்களைத் தடுக்கும் வகையில் அச்சுறுத்தல்களும், விசாரணைகளும் பரவலாக அரங்கேற்றப்படுகின்றன.  

போர் முடிவுற்று பதின்மூன்று ஆண்டுகள் நிரம்பிய பின்னரும், வடக்கு, கிழக்கிலுள்ள 27 மாவீரர் துயிலும் இல்லங்களில், யாழ்ப்பாண மாவட்டத்தின் கொடிகாமம், எள்ளங்குளம், கோப்பாய் ஆகிய துயிலும் இல்லங்கள், கிளிநொச்சி மாவட்டத்தின் தேராவில் துயிலும் இல்லம், முல்லைத்தீவு மாவட்டத்தின் முள்ளியவளை, ஆலங்குளம், அளம்பில், நெடுங்கேணி களிக்காடு, மற்றும் மணலாறிலுள்ள உதயபீடம், கோடாலிக்கல் புனிதபூமி ஆகிய துயிலும் இல்லங்கள், வவுனியா ஈச்சங்குளம் துயிலும் இல்லம், மட்டக்களப்பு தாண்டியடி துயிலும் இல்லம் ஆகிய பன்னிரண்டு மாவீரர் துயிலும் இல்லங்கள் இன்றுவரை இராணுவப் படை முகாம்களாக முற்றுகையிடப்பட்டுள்ளன என குறிப்பிட்டுள்ளார். 


மருத்துவர்கள் வெளிநாடு செல்வது தொடர்பில் வெளியான தகவல்

மருத்துவர்கள் வெளிநாடு செல்வது தொடர்பில் வெளியான தகவல்

இலங்கை வங்கி மற்றும் மக்கள் வங்கிகளில் அதிக அளவில் கடன் பெற்றுக்கொண்ட 10 முக்கியஸ்தர்கள்

இலங்கை வங்கி மற்றும் மக்கள் வங்கிகளில் அதிக அளவில் கடன் பெற்றுக்கொண்ட 10 முக்கியஸ்தர்கள்

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW


மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம்

22 Jul, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், யாழ்ப்பாணம், கொழும்பு, Chennai, India, Toronto, Canada

24 Jun, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தர்மடம், தாவடி

10 Aug, 2010
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை, சென்னை, India

03 Aug, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கச்சேரியடி, கொழும்பு, சண்டிலிப்பாய், சாவகச்சேரி கல்வயல்

25 Jul, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Lausanne, Switzerland

27 Jul, 2015
40ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், புங்குடுதீவு, கொக்குவில்

24 Jul, 1985
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், Bützberg, Switzerland

24 Jul, 2024
மரண அறிவித்தல்

இருபாலை, உடுவில், பிரான்ஸ், France

21 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Kedah, Malaysia, சண்டிலிப்பாய், Cheam, United Kingdom

04 Aug, 2024
மரண அறிவித்தல்

Toronto, Canada, Mississauga, Canada

08 Jul, 2025
மரண அறிவித்தல்

சுழிபுரம், Mississauga, Canada

21 Jul, 2025
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, திருகோணமலை, London, United Kingdom, Birmingham, United Kingdom

21 Jul, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Woodbridge, Canada

29 Jul, 2022
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொக்குவில், Livry-Gargan, France

23 Jun, 2025
20ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொக்குவில் மேற்கு

25 Jul, 2005
10ம் ஆண்டு நினைவஞ்சலி

இளவாலை, கொழும்பு, London, United Kingdom

24 Jul, 2015
7ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, மானிப்பாய், London, United Kingdom

25 Jul, 2018
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு, காரைநகர் களபூமி, கொழும்பு, கனடா, Canada

24 Jun, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Ontario, Canada, Savigny-le-Temple, France

24 Jul, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், Zürich, Switzerland

24 Jul, 2022
14ம் ஆண்டு நினைவஞ்சலி

மருதங்கேணி, Bunde, Germany

24 Jul, 2011
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
மரண அறிவித்தல்

சுழிபுரம், Bowmanville, Canada

21 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை, Toronto, Canada, Mulhouse, France

02 Aug, 2024
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, அராலி வடக்கு, யாழ்ப்பாணம், helsinki, Finland

20 Jul, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, யாழ்ப்பாணம், Pickering, Canada

20 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, East Ham, United Kingdom

24 Jul, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு 7ம் வட்டாரம், London, United Kingdom

19 Jul, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US