நாடாளுமன்ற அமர்வுகளுக்காக வீணடிக்கப்பட்ட 45 மில்லியன் ரூபா
45 மில்லியன் ரூபா செலவில் சபாநாயகருக்கு எதிராக நாடாளுமன்றத்தில் நடைபெற்ற மூன்று நாள் விவாதம் வீணானது என சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.
இலங்கை போன்ற ஒரு நாட்டிற்கு இவ்வாறான பெரும் தொகை வீணடிக்கப்பட்டமையை சகித்துக்கொள்ள முடியாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நிகழ்நிலை காப்பு சட்டமூலத்தை நிறைவேற்றும் போது செயற்பட்ட விதத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களால் சபாநாயகருக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டுவரப்பட்டது.

அதிகாரம் இல்லை
இருப்பினும் நிகழ்நிலை காப்பு சட்டமூலம் தொடர்பான முன்மொழிவுகளை ஏற்கவோ அல்லது நிராகரிக்கவோ தனக்கு அதிகாரம் இல்லை எனவும் சபாநாயகர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும் அரசியலமைப்பு பேரவை தீர்மானமற்ற முறையில் செயற்பட்டால் அது தேசிய பாதுகாப்பிற்கு ஆபத்தை ஏற்படுத்தும் என அவர் தெரிவித்துள்ளார்.
அன்புக்கரசிற்கு பார்கவி கொடுத்த தரமான பதிலடி, கரிகாலனின் கிரிமினல் பிளான்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
போதைப்பழக்கத்தில் சிக்கிய கேப்டன்: இனி அணியில் எடுக்க மாட்டோம்..கிரிக்கெட் வாரியம் திட்டவட்டம் News Lankasri
கோவை மாணவி துஷ்பிரயோகம்: முதலில், அந்தப் பெண் தவறு: இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் கருத்து News Lankasri
இன்னும் திருந்தாத மயிலின் அப்பா, இப்போது செய்த காரியம், வெடிக்கப்போகும் பிரச்சனை... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 Cineulagam