முன்னாள் ஜனாதிபதிகள் மற்றும் மனைவிமார் அனுபவிக்கும் சலுகைகளை குறைக்க தயாராகும் நாடாளுமன்றம்
முன்னாள் ஜனாதிபதிகள் மற்றும் மனைவிமார் அனுபவிக்கும் சலுகைகளைக் குறைப்பதற்கான ஒரு பிரேரணையை விவாதிக்க இலங்கை நாடாளுமன்றம் முடிவு செய்துள்ளது.
2025 மே 8 மற்றும் 9ஆம் திகதிகளில் நாடாளுமன்றம் கூடவுள்ளது.
நேர ஒதுக்கம்
அதன்படி, மே 8 முற்பகல் 9.30 மணி முதல் முற்பகல் 10 மணி வரையிலான நேரம் நாடாளுமன்ற அலுவலுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. வாய்மொழி பதில்களுக்கான கேள்விகளுக்கு முற்பகல் 10 மணி முதல் 11 மணி வரை நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.
அதேநேரத்தில் 11 மணி முதல் 11.30 மணி வரை நேரம் நாடாளுமன்றத்தின் நிலையியற் கட்டளையின் கீழ் கேள்விகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
அதன் பிறகு, முற்பகல் 11.30 மணி முதல் மாலை 5 மணி வரை, சமர்ப்பிக்கப்பட்ட இறக்குமதி வரிகள் தொடர்பான சுங்கக் கட்டளைச் சட்டத்தின் தீர்மானம் விவாதிக்கப்படவுள்ளது. பின்னர், மாலை 5 மணி முதல் மாலை 5.30 மணி வரை, எதிர்க்கட்சியின் ஒத்திவைப்பு பிரேரணை, எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.
மே 9
மே 9, முற்பகல் 9.30 மணி முதல் முற்பகல 10.00 மணி வரை, நாடாளுமன்றத்தின் அலுவல்கள் குறித்து விவாதிக்க நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.
முற்பகல் 10.00 மணி முதல் 11.00 மணி வரை, வாய்மொழி பதில் கேள்விகளுக்கும், 11.00 மணி முதல் 11.30 மணி வரை, கேள்விகளுக்கும் நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.
முற்பகல் 11.30 மணி முதல் மாலை 5.00 மணி வரை, ஆறு தனியாள் உறுப்பினர்களின் பிரேரணைகளை விவாதிக்க நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.
அதன்படி, நாடாளுமன்ற உறுப்பினர் ஹேஷா விதானகே முன்வைத்துள்ள, இலங்கை நாடாளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் மக்கள் பிரதிநிதிகள், முன்னாள் ஜனாதிபதிகள், மற்றும் அவர்களது மனைவிமார் அனுபவிக்கும் சலுகைகளை முறையாகக் குறைப்பதற்கான பிரேரணை விவாதிக்கப்படவுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
