பரிகார பூஜை: 5 ஆண்டுகளாக பெண்ணை வன்புணர்வுக்கு உட்படுத்திய சாமியார் - கர்நாடகாவில் சம்பவம்
பரிகார பூஜை என்ற பெயரில் 5 ஆண்டுகளாக பெண்ணொருவர் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்ட சம்பவம் ஒன்று இந்தியாவின் கர்நாடக மாநிலத்தில் நடந்துள்ளது.
கர்நாடக மாநிலம் அவலஹள்ளி பிரதேசத்தை சேர்ந்த பெண்ணொருவர் 5 ஆண்டுகளுக்கு முன்னர் நிகழ்ச்சி ஒன்றில் ஆனந்தமூர்த்தி என்ற சாமியாரை சந்தித்துள்ளார்.
அப்போது பெண்ணின் குடும்பத்திற்கு அடுத்த 5 ஆண்டுகளில் பெரிய ஆபத்து ஏற்பட உள்ளதாகவும் உடனடியாக வீட்டில் சில பரிகார பூஜைகளை நடத்த வேண்டும் எனவும் அந்த சாமியார் கூறியுள்ளார்.
ஆனந்தமூர்த்தி சக்திமிக்க சாமியார் என பிரதேச மக்களால் கூறப்பட்டு வந்ததால், பாதிக்கப்பட்ட பெண் பரிகார பூஜைக்கு இணங்கி, சாமியாரை வீட்டுக்கு அழைத்துள்ளார்.
குறித்த நாளில் சாமியாரும் அவரது மனைவி லதா என்பவரும் பெண்ணின் வீட்டுக்கு சென்று பூஜையை ஆரம்பித்துள்ளனர்.
வன்புணர்வு சம்பவத்தை காணொளியில் பதிவு செய்த மனைவி
அப்போது தீர்த்தம் எனக் கூறி சாமியார் ஆனந்தமூர்த்தி போதைப் பொருளை வழங்கி பெண்ணை வன்புணர்வுக்கு உட்படுத்தியுள்ளார். இதனை அவரது மனைவி லதா காணொளியாக பதிவு செய்துள்ளார்.
இந்த தகவல் வெளியில் தெரியவந்தால், காணொளியை வெளியிட்டு விடுவோம் என்ற அச்சுறுத்தியுள்ளனர். தொடர்ந்தும் காணொளியை காண்பித்து பல முறை வன்புணர்வு செய்ததாக பாதிக்கப்பட்ட பெண் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.
இதனையடுத்து, சாமியார் மற்றும் அவரது மனைவிக்கு எதிராக பொலிஸார் வழக்கு பதிவு செய்து விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.





16 ஆண்டுகால ஐ.நா மைய அரசியல்: பெற்றவை? பெறாதவை...... 12 மணி நேரம் முன்

சித்திரவதை செய்யப்பட்டு கடலில் தூக்கி எறியப்பட்ட புலம்பெயர்ந்தோர்: அதிரவைக்கும் ஒரு செய்தி News Lankasri

ஜாய் கிரிசில்டா பேச்சால் பல கோடி நஷ்டம்.. நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்த மாதம்பட்டி ரங்கராஜ் Cineulagam

அமெரிக்காவை உலுக்கிய படுகொலையில் உக்ரைனுக்கு பங்கா? எம்.பி ஒருவரின் பேச்சால் அதிர்ச்சி News Lankasri

நந்தினியால் ஜனனிக்கு ஏற்பட்ட பிரச்சனை, ரவுண்டு கட்டிய குணசேகரன் ஆட்கள்.. எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
