மாவீரர்களின் பெற்றோர்களுக்கு கௌரவிப்பு! (Photos)

Sri Lankan Tamils Ampara Batticaloa Sri Lanka
By Kumar Nov 25, 2022 12:04 PM GMT
Report

வடக்கில் பல பகுதிகளில் மாவீரர்களின் பெற்றோர்கள் மற்றும் உறவினர்களுக்கு கௌரவிப்பு நிகழ்வு இடம்பெற்றுள்ளது.

இந்நிகழ்வு நேற்று (24.11.2022) மட்டக்களப்பு வெல்லாவெளியில் அமைந்துள்ள ஜனநாயகப் போராளிகள் கட்சி மட்டு. அம்பாறை தலைமைக் காரியாலயத்தில் இடம்பெற்றுள்ளது.

கௌரவிப்பு நிகழ்வு

இந்நிகழ்வின் ஆரம்பத்தில் மாவீரர்களை நினைவு கூரும் முகமாக மாவீரர்களின் பெற்றோர், ஜனநாயகப் போரளிகள் கட்சியின் உபதலைவர், காரைதீவு பிரதேச சபைத் தவிசாளர் உள்ளிட்டோரால் ஈகைச்சுடர் ஏற்றி மலர்தூவி அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.

மாவீரர்களின் பெற்றோர்களுக்கு கௌரவிப்பு! (Photos) | Parents Relatives Honoured Tamil Peoples Sri Lanka

அதனைத் தொடர்ந்து நினைவுரை, சிறப்புரைகள் இடம்பெற்று பின் மட்டக்களப்பு மாவட்ட மாவீரர்களின் பெற்றோர்களை கௌரவிக்கும் முகமாக அவர்களுக்கு உதவிகள் மற்றும் தென்னங்கன்றுகளும் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.

மாவீரர் நினைவு நாள்

மாவீரர் நினைவு வாரத்தை அனுஷ்டிக்கும் முகமாக வடக்கு கிழக்கு பகுதிகளில் ஜனநாயகப் போராளிகள் கட்சியின் ஏற்பாட்டில் பல செயற்திட்டங்கள், துயிலுமில்ல துப்பரவுப் பணிகள், மாவீரர் தின நினைவேந்தல் ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற நிலையில் மாவீரர் குடும்பங்களைக் கௌரவிக்கும் முகமாக மேற்படி நிகழ்வு ஒழுங்கு படுத்தப்பட்டு நடாத்தப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

மாவீரர்களின் பெற்றோர்களுக்கு கௌரவிப்பு! (Photos) | Parents Relatives Honoured Tamil Peoples Sri Lanka

இந்நிகழ்வில் ஜனநாயகப் போராளிகள் கட்சியின் உபதலைவர் என்.நகுலேஸ் தலைமையில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் ஜனநாயகப் போராளிகள் கட்சியின் கொள்கைப் பரப்புச் செயலாளர் ப.சாந்தன், காரைதீவுப் பிரதேச சபைத் தவிசாளர் கி.ஜெயசிறில், வெல்லாவெளி பிரதேச சபை உறுப்பினர் தியாகராஜா, உள்ளிட்ட கட்சியின் பிரதிநிதிகள், மாவீரர்களின் பெற்றோர்கள், உறவினர்கள் எனப் பலரும் கலந்து கொண்டுள்ளனர்.

செய்தி: குமார்

திருகோணமலை

ஜனநாயகப் போராளிகள் கட்சியின் ஏற்பாட்டில் மாவீரர்களின் பெற்றோர்கள், உறவினர்கள் கௌரவிப்பு நிகழ்வு இன்றைய தினம் திருகோணமலையில் இடம்பெற்றுள்ளது.

மாவீரர்களின் பெற்றோர்களுக்கு கௌரவிப்பு! (Photos) | Parents Relatives Honoured Tamil Peoples Sri Lanka

நிகழ்வின் ஆரம்பத்தில் மாவீரர்களின் பெற்றோர்கள் மங்கல வாத்தியத்துடன் கௌரவமாக அழைத்து வரப்பட்டனர். அதனைத் தொடர்ந்து மாவீரர்களை நினைவு கூரும் முகமாக மௌன அஞ்சலி செலுத்தப்பட்டு, வருகை தந்தோர் அனைவராலும் ஈகைச் சுடர் ஏற்றப்பட்டு, மலர்தூவி அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.

அதனைத் தொடர்ந்து நினைவுரை, சிறப்புரைகள் இடம்பெற்று பின் திருகோணமலை மாவட்ட மாவீரர்களின் பெற்றொர்களை கௌரவிக்கும் முகமாக அவர்களுக்கு தென்னங்கன்றுகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

மாவீரர்களின் பெற்றோர்களுக்கு கௌரவிப்பு! (Photos) | Parents Relatives Honoured Tamil Peoples Sri Lanka

ஜனநாயகப் போராளிகள் கட்சியின் திருகோணமலை மாவட்ட இணைப்பாளர் எம்.நவமேனன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் ஜனநாயகப் போராளிகள் கட்சியின் தேசிய அமைப்பாளர் க.துளசி, திருகோணமலை நகரசபைத் உபதவிசாளர் கா.கோகுல்ராஜ் (தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு) எனப் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

செய்தி: நவோஜ்

யாழ்ப்பாணம்

மாவீரர்களின் பெற்றோரைக் கௌரவிக்கும் நிகழ்வு (25.11.2022) இன்றைய தினம் வட்டுக்கோட்டை தமிழரசுக் கட்சியின் அலுவலகத்தில் நடைபெற்றது.


முன்னாள் போராளி செழியன் தலைமையில், தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஈஸ்வரபாதம் சரவணபவன் ஏற்பாட்டில் குறித்த கௌரவிப்பு நிகழ்வு நடைபெற்றுள்ளது.

பொதுச்சுடர் ஏற்றப்பட்டு, மலர் அஞ்சலி செலுத்தி குறித்த நிகழ்வு ஆரம்பமானது. நிகழ்வின்போது மாவீரர்களது நினைவுரைகள் இடம்பெற்றன. பின்னர் மாவீரர்களின் பெற்றோர்களை கௌரவிக்கும் நிகழ்வு இடம்பெற்றுள்ளது.

மாவீரர்களின் பெற்றோர்களுக்கு கௌரவிப்பு! (Photos) | Parents Relatives Honoured Tamil Peoples Sri Lanka

இந்நிகழ்வில் மாவீரர்களின் பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள், முன்னாள் போராளிகள், பிரதேச சபையின் உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டுள்ளனர்.

செய்தி: கஜிந்தன்    

GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery
நன்றி நவிலல்

நெல்லியடி, London, United Kingdom, Melbourne, Australia

30 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Noisiel, France

29 Jun, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, North York, Canada

13 Jul, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வேலணை சோளாவத்தை, London, United Kingdom

27 Jun, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய் மேற்கு, சுன்னாகம்

29 Jun, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

துணுக்காய், புத்தூர், பேர்ண், Switzerland

14 Jul, 2022
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, Oshawa, Canada

21 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ் பருத்தித்துறை வராத்துப்பளை, Jaffna, புற்றளை

25 Jun, 2026
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, Zürich, Switzerland

24 Jun, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, சிட்னி, Australia, கொழும்பு

28 Jun, 2011
மரண அறிவித்தல்

சண்டிலிப்பாய், Vaughan, Canada

24 Jun, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், ஆறுகால்மடம், பிரான்ஸ், France

24 Jun, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Montreal, Canada, நியூ யோர்க், United States

25 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, Mississauga, Canada

08 Jul, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ் மண்டைதீவு 7ம் வட்டாரம், Jaffna, மல்லாவி யோகபுரம், London, United Kingdom

23 Jun, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், கொக்குவில் கிழக்கு, வெள்ளவத்தை, Le Blanc-Mesnil, France

20 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சிறுப்பிட்டி, Edgware, United Kingdom

27 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, உருத்திரபுரம், Montreal, Canada

30 Jun, 2021
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, Villeneuve-Saint-Georges, France

20 Jun, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US