சிறீதரனுக்கும் டக்ளஸ் தேவானந்தாவிற்கும் இடையில் நடந்த வாக்குவாதம்! பரபரப்பாகிய நாடாளுமன்றம்
யுத்தம் முடிவிற்கு வந்த பின்னரே வடக்கில் போதைப்பொருள் பாவனை அதிகரித்ததாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் (Sivagnanam Shritharan) சபையில் கூறிய வேளையில் அதனை நிராகரித்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா (Douglas Devananda) தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் போதைப்பொருள் வர்த்தகர் என கூறியுள்ளார்.
இதனையடுத்து இருவருக்கும் இடையிலான வாக்குவாதத்தில் சபை பரபரப்பானது.
இந்த சந்தர்ப்பத்தில் அமைச்சர் டக்ளஸ் மேலும் கூறுகையில், தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் ஒரு போதைப்பொருள் வியாபாரி. அவர் போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்டார். இது சிறீதரனுக்கு தெரியுமோ அல்லது மறைக்கிறாரோ தெரியாது என குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் வருகிறது இன்றைய தினத்திற்கான பத்திரிகைகளின் கண்ணோட்டம்,