“கொல்பவன் வெல்வான்” வாசகத்துடன் யாழில் விடுதலைப் புலிகளின் கிளைமோர் குண்டு
விடுதலைப் புலிகளின் தயாரிப்பான அதிசக்திவாய்ந்த கிளைமோர் குண்டு ஒன்று புதைக்கப்பட்ட நிலையில் மீட்கப்பட்டுள்ளதாக இராணுவத்தின் யாழ்ப்பாணம் 51ஆவது படைத்தளம் தெரிவித்துள்ளது.
ஊர்காவற்றுறை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட வேலணை அம்பிகா நகர் பகுதியில் நேற்று இந்தக் கிளைமோர் குண்டு மீட்கப்பட்டுள்ளது.
மாவீரர் வாரம் ஆரம்பமாகியுள்ள நிலையில் தமிழீழ விடுதலைப் புலிகளின் தயாரிப்பான “கொல்பவன் வெல்வான்” என்ற வாசகம் பொறிக்கப்பட்ட கிளைமோர் குண்டு மீட்கப்பட்டுள்ளதாக இராணுவம் தெரிவித்துள்ளது.
இந்த தகவலுடன் இன்னும் பல முக்கிய செய்திகளை உள்ளடக்கி வருகிறது இன்றைய தினத்திற்கான பத்திரிகைககளின் கண்ணோட்டம்,