லொஹானுக்கு சுட்டுக்கொல்ல அதிகாரம் வழங்கினாரா ஜனாதிபதி? சபையில் அம்பலமான விடயம்
“இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச (Gotabaya Rajapaksa) எனக்கொரு அதிகாரத்தை வழங்கியுள்ளார், அதன்படி நான் விரும்பினால் உங்களை விடுதலை செய்யலாம் அல்லது சுட்டுக் கொலை செய்யலாம்” என்று கூறியே தமிழ் அரசியல் கைதிகளின் தலையில் துப்பாக்கியை வைத்து இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த (Lohan Ratwatte) கொலை அச்சுறுத்தல் விடுத்துள்ளதாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினரான செல்வராசா கஜேந்திரன் (S. Kajendran) தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் நேற்றைய தினம் உரையாற்றும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் லொஹான் ரத்வத்தவின் தவறுக்கு அவரின் மற்றைய இராஜாங்க அமைச்சு நீக்கப்படவில்லை. இதனை நாங்கள் வன்மையாக கண்டிக்கின்றோம் என குறிப்பிட்டுள்ளார்.
இது உள்ளிட்ட இன்னும் பல முக்கிய செய்திகளுடன் வருகிறது இன்றைய தினத்திற்கான பத்திரிகைகளின் கண்ணோட்டம்,