அமெரிக்காவிற்கு இலங்கையின் உத்தியோகபூர்வ அறிவிப்பு
இலங்கை தொடர்பில் அமெரிக்க காங்கிரஸ் பிரதிநிதியான டெபோரா கே.ரோஸினால் அமெரிக்க பிரதிநிதிகள் சபையில் முன்வைக்கப்பட்ட தீர்மானம் தொடர்பில் அடுத்த கட்ட நகர்வுகள் எதனையும் மேற்கொள்ள வேண்டாமென அமெரிக்காவிடம் இலங்கை உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.
முள்ளிவாய்க்கால் இனப்படுகொலைகளின் 12 வருட பூர்த்தியையொட்டி அமெரிக்க காங்கிரஸ் கட்சியின் செயற்திறன்மிக்க சர்வதேசப் பொறிமுறை மற்றும் இலங்கையில் நிரந்தர அரசியல் தீர்வு ஆகிய தலைப்புக்களில் கடந்த மே மாதம் 18ஆம் திகதி அமெரிக்க பிரதிநிதிகள் சபையில் தீர்மானமொன்று முன்வைக்கப்பட்டது.
இத்தீர்மானம் தொடர்பான தமது நிலைப்பாட்டை கடந்த புதன்கிழமை வெளிப்படுத்திய இலங்கை வெளிவிவகார அமைச்சு, இந்தத் தீர்மானம் ஒருதலைப் பட்சமானதும் அபாண்டமான பொய்க் குற்றச்சாட்டுக்களை உள்ளடக்கியதாகவும் அமைந்துள்ளதென்று குறிப்பிடப்பட்டிருந்தது.
அதுமாத்திரமின்றி இத்தீர்மானம் வெறுமனே உரிமை சார்ந்த தீர்மானம் அல்ல எனவும், தமிழீழ விடுதலைப் புலிகளின் பிரிவினைவாத நிகழ்ச்சி நிரலை முன்னெடுத்துச் செல்வதற்காக அமெரிக்க காங்கிரஸிலுள்ள ஒத்த கருத்துடைய தமிழீழ விடுதலைப் புலிகளின் அனுதாபிகளின் தலையீட்டினால் கொண்டுவரப்பட்ட தீர்மானமென்றும் வெளிவிவகார அமைச்சு சாடியிருந்தது.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் வருகிறது இன்றைய தினத்திற்கான பத்திரிகைகளின் தொகுப்பு,