அந்தமான் தீவுக்கருகில் நிலைகொண்டுள்ள தாழமுக்கம் சூறாவளியாக மாறும் சாத்தியம் - இலங்கைக்கு பாதிப்பா?
அந்தமான் தீவுக்கருகில் குறைந்த அழுத்தத்துடன் நிலைகொண்டுள்ள தாழமுக்கம் வளர்ச்சியடைந்து வரும் நிலையில் அது சூறாவளியாக மாறுமென வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அது இந்தியாவின் மேற்கு பிரதேசத்திற்குள் பிரவேசிக்குமென தெரிவித்துள்ள திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் அதுல கருணாநாயக்க இலங்கைக்குள் சூறாவளி பிரவேசிக்கும் வாய்ப்பில்லை என குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் நாட்டின் வடக்கு, கிழக்கு மாகாண ஆழ் கடல் பிரதேசங்களில் அதன் பாதிப்பு நேரடியாக இருக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும் நாட்டில் பல்வேறு பகுதிகளிலும் இடியுடன் கூடிய கடும் மழை பெய்யுமென்றும் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் வருகிறது இன்றைய தினத்திற்கான பத்திரிகைகளின் கண்ணோட்டம்,