ஜனாதிபதி மாளிகையில் இருந்து காணாமல்போயுள்ள பெறுமதியான பொருள்: வெளியான தகவல்
கடந்த ஆண்டு நாட்டில் அரசாங்கத்திற்கு எதிராக பல போராட்டங்கள் இடம்பெற்றன.
இதன்போது போராட்டக்காரர்கள் ஜனாதிபதி மாளிகை உட்பட பல முக்கிய இடங்களை ஆக்கிரமித்தனர்.
இந்நிலையில் ஜனாதிபதி மாளிகைக்குள் போராட்டக்காரர்கள் பிரவேசித்த பின்னர் அங்கிருந்த பெறுமதியான 39 மர மற்றும் கேன்வாஸ் ஓவியங்கள் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து அதிகாரிகள் குழுவொன்று ஜனாதிபதி மாளிகைக்கு சென்று தற்போது அடிப்படை பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதாக தெரியவருகின்றது.
தொல்லியல் திணைக்கள அதிகாரிகள் குழு
கடந்த சில தினங்களுக்கு முன்னர் தொல்லியல் திணைக்கள அதிகாரிகள் குழுவினால் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் போதே இந்த தகவல் வெளியாகியுள்ளது.
இதேவேளை, ஜனாதிபதி மாளிகையின் 209 ஓவியங்கள் மற்றும் சித்திரங்கள் பாதுகாப்பிற்காக தொல்பொருள் திணைக்களத்திடம் கையளிக்கப்பட்டுள்ளதுடன், அதிகாரிகள் குழுவொன்று ஜனாதிபதி மாளிகைக்கு சென்று தற்போது அடிப்படை பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளது.
ஓவியங்களின் சிதைவு நிலைமைகளை ஆராய்ந்து, பாதுகாப்பு தொடர்பான பூர்வாங்க சிபாரிசு அறிக்கையை தயாரிப்பதற்கான ஆயத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகத் தொல்லியல் திணைக்களத்தின் பணிப்பாளர் (இரசாயனப் பாதுகாப்பு) கீதானி குருப்புஆராச்சி தெரிவித்துள்ளார்.



