பெரும்போக நெல்விளைச்சல் போதுமானதாக இல்லை: விவசாயத் திணைக்களம்
நடப்பு பெரும்போக பருவத்தில் ஒரு ஹெக்டயாருக்கு நெல் விளைச்சல் 3.1 மெட்ரிக் தொன் அளவிலான விளைச்சலே கிடைத்துள்ளதாக விவசாயத் திணைக்களம் உறுதிப்படுத்தியுள்ளது.
2021 ம் ஆண்டின் பெரும்போகத்திற்கு முன்னர், நாட்டில் ஒரு ஹெக்டயாருக்கு அறுவடை செய்யப்பட்ட நெல் அளவு 4.1 முதல் 4.5 மெட்ரிக் தொன்கள் வரையான உயர்விளைச்சல் கிடைத்து வந்தது மேலும், இரசாயன உரங்களின் பயன்பாடு தடை செய்யப்பட்டதன் மூலம், 2021 பெரும் போகத்தில் ஹெக்டயாருக்கு நெல் விளைச்சல் மேலும் 2.1 மெட்ரிக் தொன்னாகக் குறைந்தது.
இரசாயன உரங்கள்
எவ்வாறாயினும், 2022 ஆம் ஆண்டு முதல் மீண்டும் இரசாயன உரங்களை வழங்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்ததன் மூலம், இலங்கையில் ஒரு ஹெக்டயாருக்கு அறுவடை செய்யப்படும் நெல்விளைச்சலின் அளவு 3.1 மெற்றிக் தொன்களாக அதிகரித்துள்ளதாக அமைச்சு தெரிவித்துள்ளது.
நாட்டின் அரிசி தேவையை பூர்த்தி செய்வதற்கு இந்த விளைச்சல் போதாது என கமத்தொழில் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
நெற்செய்கைக்கான பத்தாண்டுத் திட்டம்
இதன் காரணமாக விவசாய அமைச்சும் விவசாயத் திணைக்களமும் இணைந்து இந்நாட்டில் நெற்செய்கைக்கான பத்தாண்டுத் திட்டத்தைத் திட்டமிட்டுள்ளன.
இதன்படி, அடுத்த 03 வருடங்களில் ஹெக்டயார் ஒன்றின் நெல் விளைச்சலை 4.5 மெற்றிக் தொன்களாகவும், 05 வருடங்களில் 5.2 மெற்றிக் தொன்களாகவும், 10 வருடங்களில் 5.5 மெற்றிக் தொன்களாகவும் அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.

சைவ சமயத்தவர்களை மதமாற்றும் நோக்குடன் வருபவர்கள் விரட்டியடிக்கப்படுவார்கள்: மறவன்புலவு சச்சிதானந்தம் எச்சரிக்கை(Photo)

கிரகங்களின் பெயர்ச்சியால் அடுத்த வாரம் உங்களுக்கு எப்படி அமையப் போகின்றது!அதிலும் கும்ப ராசிக்காரர்களுக்கு-வாரத்திற்கான ராசிபலன்

கிழக்கு பல்கலையின் முன்னாள் உபவேந்தர் படுகொலையுடன் பிள்ளையானிற்கு தொடர்பு: வெளியான பகீர் தகவல் (Video)

40 வயதுக்கு மேல் திருமணம் செய்துகொண்டது ஏன்?- உண்மையில் எனது வயது 44 இல்லை, நடிகை ஓபன் டாக் Cineulagam

மிகவும் ஆபத்தானவர், நெருங்க வேண்டாம்: தீவிரமாக தேடப்படும் தமிழர் தொடர்பில் லண்டன் பொலிசார் எச்சரிக்கை News Lankasri
