கனமழையால் பெரும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ள பொதுமக்கள்

Central Province Eastern Province Northern Province of Sri Lanka Weather
By H. A. Roshan Nov 26, 2024 12:44 PM GMT
H. A. Roshan

H. A. Roshan

in இயற்கை
Report
Courtesy: H A Roshan

சீரற்ற கால நிலையின் காரணமாக தம்பலகாமம் பிரதேச செயலகப் பகுதியில் உள்ள பல ஏக்கர் வயல் நிலங்கள் நீரிழ் மூழ்கி நெற் செய்கை பாதிக்கப்பட்டுள்ளது. 

தொடர் கன மழை காரணமாக தம்பலகாமம் கோயிலடி பகுதியை அண்டிய வயல் நிலங்கள் நீரில் மூழ்கியுள்ளது இதனால் நெற் செய்கை முழுமையாக அழிவடைந்துள்ளதாகவும் விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

இது தவிர  தம்பலகாமம் பிரதேச செயலக பகுதியில் தாழ் நிலப் பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன குறிப்பாக முள்ளிப்பொத்தானை, மீரா நகர், பாலம் போட்டாறு ஆகிய கிராம சேவகர் பிரிவுகளில் அதிகளவான நீர் தேங்கி நிற்பதனால் மக்களின் அன்றாட வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.


தொடரும் கனமழை : விடுக்கப்பட்டுள்ள சிவப்பு எச்சரிக்கை

தொடரும் கனமழை : விடுக்கப்பட்டுள்ள சிவப்பு எச்சரிக்கை

திருகோணமலை

மேலும். பெய்து வரும் கனமழை காரணமாக, திருகோணமலை - கிண்ணியா பிரதேசத்தில் அமைந்துள்ள காளிபாஞ்சான் ஆறு பெருக்கடுத்துள்ளதால், சூரங்கல் மற்றும் வன்னியனார்மடு ஆகிய பகுதிகளில் உள்ள சுமார் 800 ஏக்கர் விவசாய நிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

சீரற்ற காலநிலையால் நேர்ந்த விபரீதம் - பெண்ணொருவர் உறக்கத்தில் மரணம்

சீரற்ற காலநிலையால் நேர்ந்த விபரீதம் - பெண்ணொருவர் உறக்கத்தில் மரணம்

வேளாண்மை செய்கை பண்ணப்பட்டு 21 நாட்களே கடந்த நிலையில், வயல் காணிகளை வெள்ள நீர் மூடியுள்ளது. மூன்று நாட்களுக்கு மேலாக இந்த வெள்ளம் சிறு பயிரை மூடியிருப்பதால் , இந்த வயல் நிலங்களை கைவிட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர். 

“வெள்ளம் வடிந்தோடிய பிறகு, இந்த நிலங்களில் மீண்டும் புதிதாக விதைக்க வேண்டும். நாங்கள் கடன்பட்டு, அடகு வைத்து இந்த வேளாண்மையை செய்தோம். மீண்டும் செய்வதென்றால் எங்கே போவது?

அரசாங்கமே எங்களுக்கு உதவி செய்ய வேண்டும்’’ என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சீரற்ற காலநிலையால் அம்பாறையில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் பாதிப்பு

சீரற்ற காலநிலையால் அம்பாறையில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் பாதிப்பு

மகாவலி கங்கை பெருக்கக்கூடிய ஆபத்து

அத்தோடு, கனமழை காரணமாக, மகாவலி கங்கை பெருக்கக்கூடிய ஆபத்து இருப்பதால், மகாவலி கங்கை சங்கமிக்கின்ற திருகோணமலை கொட்டியார குடாவை அண்டிய பகுதியில் வாழுகின்ற மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டுமென கிண்ணியா பிரதேச செயலாளர் எம். எச். எம். கனி பொதுமக்களை கேட்டுக் கொண்டுள்ளார்.

கனமழையால் பெரும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ள பொதுமக்கள் | Paddy Fields Submerged In Water

உப்பாறு, பூவரசன்தீவு மற்றும் சமவாஜதீவு ஆகிய 3 கிராம சேவகர் பிரிவுகளை சேர்ந்த மக்களே அவதானமாக இருக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

வெள்ள நீரை வெளியேற்றுவதற்கான உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்றும் உயர்தர பரீட்சை எழுதுகின்ற மாணவர்களுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாதவாறு வசதிகள் செய்து கொடுக்கப்பட்டிருக்கின்றன என்றும் பிரதேச செயலாளர் தெரிவித்துள்ளார்.

மக்களின் கணக்கில் வரவு வைக்கப்பட்ட 200 மில்லியன் ரூபா பணம்!

மக்களின் கணக்கில் வரவு வைக்கப்பட்ட 200 மில்லியன் ரூபா பணம்!

மேல் கொத்மலை,

மத்திய மலைநாட்டில் இடைவிடாது பெய்து வரும் அடைமழையால் நீர்த்தேக்கங்களின் நீர்மட்டமும் வெகுவாக அதிகரித்து வருகின்றது.

கனமழையால் பெரும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ள பொதுமக்கள் | Paddy Fields Submerged In Water

பெய்து வரும் மழையினால் நீரோடைகள், ஆறுகள் என பெருக்கம் எடுத்து நீரேந்தும் பகுதிகளில் நீர் மட்டம் அதிகரித்து காணப்படுகின்றது.

இந்நிலையில், மேல் கொத்மலை, விமலசுரேந்திர, காசல்ரீ ஆகிய நீரேந்தும் பகுதிகளில் அதிகமான நீர்மட்டம் காணப்பட்டது. இந்நீரினை வெளியேற்றுவதற்காக 26.11.2024 அன்று நீரேந்தும் பகுதிகளில் வான்கதவுகள் திறக்கப்பட்டது. இந்நிலையில் மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தின் இரண்டு வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளன. 

செய்தி - திருமால்

மட்டக்ளப்பு

தற்போது பெய்துவரும் வடகீழ் பருவப் பெயற்சி மழை காரணமாக மட்டக்ளப்பு மாவட்டத்தில் தாழ் நிலங்களில் பலத்த வெள்ளம் ஏற்பட்டுள்ளது.

கனமழையால் பெரும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ள பொதுமக்கள் | Paddy Fields Submerged In Water

இதனால் மக்களின் அன்றாட செயற்பாடுகளில் சற்று தளம்பல் ஏற்பட்டுள்ளதையும் அவதானிக்க முடிகின்றது.

வெள்ளநீர் வழிந்தோட முடியாமல் தேங்கி நிற்பதனால் பல கிராமங்களின் உள் வீதிகளும் வெள்ள நீராமல் மூடப்பட்டுள்ளன.

இந்நிலையில் பெரியகல்லாறு ஆற்றுவாய் வெட்டப்பட்டு வெள்ள நீரை வெளியேற்ற வேண்டும் என அப்பபுதி மக்கள் பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியனுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

செய்தி - ருசாத்

முல்லைத்தீவு

தண்ணிமுறிப்பு குளத்தில் நீர்மட்டம் உயர்ந்து வருவது மற்றும் நீரின் வரத்து அதிகரித்ததன் காரணமாக, அதிக நீரை வெளியேற்ற கதவுகள் திறந்து விடப்பட்டுள்ளது.

கனமழையால் பெரும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ள பொதுமக்கள் | Paddy Fields Submerged In Water

முல்லைத்தீவு மாவட்டத்தின் பாரிய குளங்களில் ஒன்றாக காணப்படுகின்ற தண்ணிமுறிப்பு குளத்திற்கான நீர் மட்டம் அதிகரித்து காணப்படுகின்ற நிலையில் தண்ணிமுறிப்பு குளத்தின் வான்கதவுகள் இன்று (26) பிற்பகல் முத்துஐயன் கட்டு நீர்பாசன திணைக்கள பொறியியலாளர் மஞ்சுளா யொய்ஸ்குமார் மற்றும் தொழில்நுட்ப உத்தியோகத்தர் நேரடியாக குளபகுதிக்கு சென்று பார்வையிட்டதன் பின் திறக்கப்பட்டுள்ளது.

மேலும், தண்ணிமுறிப்பு குளமானது 21 அடி வரை நீரை சேமிக்க கூடியதாக இருக்கின்ற நிலையில் தற்போது 17" அடி வரை நீர் மட்டம் உயர்ந்த நிலையிலே வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளன. 

செய்தி - ஷான்

ஒருவர் அடித்துச் செல்லப்பட்டுள்ளார்

பலத்த மழை சிறிய குளங்கள் நிரம்பி வழிகின்றன, பிரதாக குளங்களும் வான்வாய்கின்றன வெள்ளத்தில் ஒருவர் அடித்துச் செல்லப்பட்டுள்ளார்.

வடகீழ் பருவப் பெயற்சி மழை தற்போது பெய்து வருகின்ற இந்நிலையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் தாழ் நிலங்கள் அனைத்தும் வெள்ளக்காடாய் காட்சி தருவதை அவதானிக்க முடிகின்றது.

கனமழையால் பெரும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ள பொதுமக்கள் | Paddy Fields Submerged In Water

இந்நிலையில் மாவட்டத்திலுள்ள சிறிய குளங்கள் அனைத்தும் நீர் நிரம்பி வழிவதுடன், பிரதான குளங்களும் வான் வாய்ந்து வவதாக அக்குளங்களுக்குப் பொறுப்பான நீர்ப்பாசனப் பெறியியலாளர்கள் தெரிவிக்கின்றனர்.

பழுகாமம், பெரியபோரதீவு, வெல்லாவெளி, பொறுகாமம், களுவாஞ்சிகுடி, களுதாவளை, தேற்றாத்தீவு, குருமண்வெளி, உள்ளிட்ட பல இடங்களில் அமைந்துள் சிறி குளங்கள் அனைத்தும் நீர் நிரம்பி வழிகின்றன.

செய்தி - ருசாத்

இரணைமடு குளம்

இரணைமடு குளத்திற்கான நீர்வரத்து அதிகரிப்பால், மேலதிக நீரை வெளியேற்றுவதற்காக வான் கதவுகள் இன்று திறக்கப்படலாம் என வெள்ளமுன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இன்று பகல்வரை 36 அடி கொள்ளளவு கொண்ட இரணைமடுக்குளம் 27 அடியை அண்மித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கனமழையால் பெரும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ள பொதுமக்கள் | Paddy Fields Submerged In Water

இரணைமடுக் குளத்தின் கீழ்ப்பகுதிகள் மற்றும் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறு மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு, தெரிவித்துள்ளது.

மேலும். கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள நீர்பாசன குளங்கள் நிறைந்து வருகின்றது. பிரமந்தனாறு குளம், கனகாம்பிகைக்குளம், வன்னேரிக்கும் ஆகியன வான் பாய்ந்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

செய்தி - எரிமலை 

முத்தையங்கட்டு குளம்

முத்தையங்கட்டு குளத்தில் நீர்மட்டம் உயர்ந்து வருவது மற்றும் நீரின் வரத்து அதிகரித்ததன் காரணமாக, அதிக நீரை வெளியேற்ற கதவுகள் திறந்து விடப்பட்டுள்ளது.

கனமழையால் பெரும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ள பொதுமக்கள் | Paddy Fields Submerged In Water

முல்லைத்தீவு மாவட்டத்தின் பாரிய குளங்களில் ஒன்றாக காணப்படுகின்ற முத்தையங்கட்டு குளத்திற்கான நீர் மட்டம் அதிகரித்து காணப்படுகின்ற நிலையில் முத்தையங்கட்டு குளத்தின் வான்கதவுகள் இன்று (26) பிற்பகல் முல்லைத்தீவு மாவட்ட பிரதி நீர்ப்பாசன பொறியியலாளர் சிவபாதசுந்தரம் விகிர்தன், முத்தையன்கட்டு பிரிவு நீர்ப்பாசன பொறியியலாளர் திருமதி மஞ்சுளா ஜொய்ஸ்குமார் தொழில்நுட்ப உத்தியோகத்தர்களால் திறந்து விடப்பட்டுள்ளது. 

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 

மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஆலங்குளாய், Saint Margrethen, Switzerland

01 Nov, 2025
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, கொழும்பு

03 Nov, 2025
மரண அறிவித்தல்

இணுவில், நவாலி தெற்கு, Scarborough, Canada

31 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், Toronto, Canada

14 Nov, 2024
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, நவிண்டில், Toronto, Canada

01 Nov, 2025
மரண அறிவித்தல்

Pussellawa, கொழும்பு, ஜேர்மனி, Germany, Scarborough, Canada

31 Oct, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
15ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி, Roermond, Netherlands

21 Oct, 2010
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு

14 Nov, 2024
மரண அறிவித்தல்

பண்டத்தரிப்பு, தமிழ் ஈழம், Hildesheim, Germany

30 Oct, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, Toronto, Canada

29 Oct, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுங்கேணி, Scarborough, Canada

02 Nov, 2023
12ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு குறிகட்டுவான், கனடா, Canada

03 Nov, 2013
மரண அறிவித்தல்

மீசாலை, இலங்கை, London, United Kingdom, Scarborough, Canada

30 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், London, United Kingdom

03 Nov, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், வவுனியா, Paris, France

13 Nov, 2024
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அச்சுவேலி

12 Nov, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 4ம் வட்டாரம்

12 Nov, 2024
மரண அறிவித்தல்

ஆனைக்கோட்டை, சவுதி அரேபியா, Saudi Arabia, சுவீடன், Sweden, London, United Kingdom, Brampton, Canada

01 Nov, 2025
மரண அறிவித்தல்

மீசாலை, மானிப்பாய், Toronto, Canada

31 Oct, 2025
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, திருகோணமலை, கொழும்பு, London, United Kingdom, Toronto, Canada

30 Oct, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம்

02 Nov, 2015
10ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், மானிப்பாய், London, United Kingdom, கனடா, Canada

02 Nov, 2020
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, கன்னாதிட்டி, Velbert, Germany, Brampton, Canada

04 Nov, 2022
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பாண்டியன்குளம், Toronto, Canada

30 Oct, 2020
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், இராமநாதபுரம், Villetaneuse, France

27 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US