அமெரிக்கா, கனடா போன்ற நாடுகளிலிருந்து இலங்கைக்கு போலி முகவரிக்கு அனுப்பப்படும் பொதிகள்
அமெரிக்கா, கனடா, பிரான்ஸ் உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளில் இருந்து இலங்கைக்கு அனுப்பப்பட்ட பெருந்தொகை போதைப்பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன.
சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டு பிரிவின் அதிகாரிகளினால் இன்று (07.12.2023 ) மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின் போதே இவை கைப்பற்றப்பட்டுள்ளன.
இந்த பொதிகள் கொழும்பு பகுதியில் உள்ள பல போலி முகவரிகளுக்கு பொதி மூலம் அனுப்பப்பட்டுள்ளதுடன், இதன் பெறுமதி சுமார் 06 கோடி ரூபா என மதிப்பிடப்பட்டுள்ளது.
போலி முகவரிகள் குறித்து விசாரணை
இதன்போது குஷ் போதைப்பொருள், ஐஸ் போதைப்பொருள் மற்றும் போதை மாத்திரைகள் பதுக்கி வைத்திருந்ததை சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவினரால் மீட்கப்பட்டுள்ளன.
சுமார் 2 மாதங்களாக இந்த பொதிகளின் உரிமையாளர்கள் இதனை வந்து பெறாத காரணத்தினால் இந்த பொதிகளில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிகளை ஆய்வு செய்த சுங்கத்துறை அதிகாரிகள், அவை போலியான முகவரிகள் என கண்டுப்பிடித்துள்ளனர்.
இதனை தொடர்ந்து மேலதிக விசாரணைகளுக்காக இந்த போதைப்பொருள் தொகை பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவின் அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்படவுள்ளது.

பிரித்தானியாவின் தடை உணர்த்துவது..! 5 மணி நேரம் முன்

சன் டிவியில் தமிழ் புத்தாண்டுக்கு வரப்போகும் படம்.. விஜய் டிவிக்கு போட்டியாக அதிரடி அறிவிப்பு Cineulagam

ட்ரம்பின் வரி யுத்தம்... 5 விமானங்களில் ஐபோன்களுடன் இந்தியாவில் இருந்து வெளியேறிய ஆப்பிள் நிறுவனம் News Lankasri

ஹாட் உடையில் வந்த ராஷ்மிகா.. பார்த்ததும் ஓடிப்போன ஏ.ஆர்.ரஹ்மான்! நிகழ்ச்சியில் நடந்த சம்பவம் Cineulagam

'அன்னை இல்லம்' தற்போதைய மதிப்பு இத்தனை கோடியா.. பிரபுவின் அண்ணனுக்கு கோர்ட் அதிரடி உத்தரவு Cineulagam

ட்ரம்புக்கு விடுக்கப்பட்ட பகிரங்க கொலை மிரட்டல்... எதற்கும் தயார் நிலையில் ஈரான் இராணுவம் News Lankasri
