கொழும்பு விந்தணு வங்கிக்கு நல்ல வரவேற்பு
கொழும்பு காஸல் வீதி மகளிர் மருத்துவமனையில் உருவாக்கப்பட்ட புதிய விந்தணு வங்கிக்கு நல்ல வரவேற்பு கிடைக்கப் பெற்றுள்ளது.
இந்த வங்கியின் ஊடாக ஏற்கனவே 6 பெண்கள் பயனடைந்துள்ளனர். கணவன்-மனைவி உறவில் குழந்தை பெற்றுக்கொள்ள முடியாதவர்களுக்கு இந்த வங்கி புதிய நம்பிக்கை வழங்கியுள்ளது.
விந்தணு வங்கி
இது இலங்கையில் குழந்தை பெற முடியாத தம்பதிகளுக்கு மிகப்பெரிய நம்பிக்கையை உருவாக்கியுள்ளது என மருத்துவமனையின் பணிப்பாளர் டொக்டர் அஜித் குமார தன்தநாராயண தெரிவித்துள்ளார்.
அண்மையில் திறக்கப்பட்ட விந்தணு வங்கிக்காக ஏற்கனவே 50க்கும் மேற்பட்ட ஆண்கள் தங்களது விந்தணுக்களை தானமாக வழங்க முன்வந்துள்ளனர்.
இதன் மூலம், சுமார் 200 பிள்ளையில்லா பெண்களுக்கு குழந்தை பெற்றுக்கொள்ளும் நம்பிக்கை உருவாகியுள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.
மருத்துவ பரிசோதனை
இந்த விந்தணு வங்கியின் பிரதான நோக்கம் குழந்தை பெற முடியாமல் பாதிக்கப்பட்ட தந்தை-தாய்மார்களுக்கு உதவுவதே. விந்தணு தானம் செய்ய விரும்பும் ஆண்கள் பல்வேறு மருத்துவ பரிசோதனைகளை கடந்து செல்ல வேண்டும்," எனவும் டொக்டர் தன்தநாராயண குறிப்பிட்டுள்ளார்.
மேலும், மருத்துவமனைக்கு தினசரி விந்தணு தானம் குறித்து பல தொலைபேசி அழைப்புகள் வருவதாகவும், தேவையான தகவல்களை மருத்துவமனை வழங்குவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





Fact Check: பூனையைக் கவ்விச் சென்ற ராட்சத பாம்பு! கடைசியில் நடந்தது என்ன? உண்மை பின்னணி இதோ Manithan

தர்ஷனை வழிக்கு கொண்டு வர அறிவுக்கரசி போட்ட பிளான், அதிர்ச்சியான குணசேகரன்.. எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு புரொமோ Cineulagam

திருப்பதி வெங்கடேஸ்வரர் அருள்தான் காரணம் - 121 கிலோ தங்கத்தை காணிக்கையாக செலுத்திய NRI News Lankasri

பிரம்மாண்டமாக தயாராகும் அல்லு அர்ஜுன்-அட்லீ படத்தில் சிறப்பு வேடத்தில் பிரபல நடிகர்... யார் தெரியுமா? Cineulagam
