இஸ்ரேல் தாக்குதல்களில் ஈரானில் 610 பேர் பலி
இஸ்ரேலிய படையினர் மேற்கொண்ட தாக்குதல்களின் காரணமாக ஈரானில் சுமார் 610 பேர் கொல்லப்பட்டுள்ளனர். ஈரான் சுகாதார அமைச்சு இது பற்றிய தகவல்களை வெளியிட்டுள்ளது.
கடந்த 13ம் திகதி முதல் ஈரானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையில் மோதல்கள் இடம்பெற்று வருகின்றன.
இந்த தாக்குதல்களின் காரணமாக 610 பேர் கொல்லப்பட்டதாகவும் இதில் 49 பெண்களும், 13 சிறுவர்களும் உள்ளடங்குவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
185 பெண்கள்
தாக்குதல்களில் 4746 பேர் காயமடைந்துள்ளனர் எனவும் இதில் 185 பேர் பெண்கள் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
இஸ்ரேல் தாக்குதல்களில் 5 சுகாதாரப் பணியாளர்கள் ஈரானில் கொல்லப்பட்டுள்ளனர். தாக்குதல்களினால் 7 மருத்துவமனைகளும் சேதமடைந்துள்ளதாக ஈரான் சுகாதார அமைச்சு தகவல் வெளியிட்டுள்ளது.
இதேவேளை, ஈரானின் செம்பிறைச் சங்கத்தின் 4 பணியாளர்கள் மோதல்களில் உயிரிழந்தனர் என அதிகாரபூர்வ தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

புதிய அரசியல் ஒழுங்கில் புவிசார் அரசியல் யுத்தங்கள் 12 மணி நேரம் முன்

பிரித்தானியாவில் ஆயிரக்கணக்கான வேலைவாய்ப்புகளை உருவாக்கும் Amazon., 40 பில்லியன் பவுண்டு முதலீடு News Lankasri

இந்தியாவை உலகத் தடைகளிலிருந்து ஈரான் ரகசியமாகக் காப்பாற்றியது எப்படி? பேசப்படாத பின்னணி News Lankasri
