2018 புத்தகாய குண்டுவெடிப்பு வழக்கு : நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு
2018 புத்தகாய குண்டுவெடிப்பு வழக்கில் 3 பேருக்கு ஆயுள் தண்டனையும், 5 பேருக்கு 10 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத்தண்டனையும் விதித்து இந்தியாவின் தேசிய புலனாய்வு பிரிவு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
குறித்த வழக்குக்கான தீர்ப்பு நேற்று (17) வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டுள்ளது.
இதன்போது, அகமது அலி (Ahmad Ali ), நூர் ஆலம் (Noor Alam Momin) மற்றும் பைகம்பர் ஷேக் (Paigamber Sheikh) ஆகியோருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
அத்துடன், ஆரிப் உசேன் (Arif Hussain), அடில் ஷேக் (Adil Sheikh), திலாவர் உசேன்(Dilawar Hussain), முஸ்தாபிசுர் ரஹ்மான் (Mustafa Rahman) மற்றும் அப்துல் கரீம் (Abdul) ஆகியோருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
ஜனவரி 19, 2018 அன்று தலாய் லாமா பிரசங்கம் செய்துவிட்டு அந்த இடத்தை விட்டு வெளியேறிய சில மணிநேரங்களுக்குப் பிறகு, ஜனவரி 19, 2018 அன்று புத்த யாத்ரீக நகரத்தில் நடந்த குண்டுவெடிப்பில் தங்களுக்குத் தொடர்பு இருப்பதாக எட்டு குற்றவாளிகளும் ஒப்புக்கொண்டனர்.
மற்றொரு குற்றவாளியான முகமட் ஜெஹிதுல் இஸ்லாம் (Zahidul Islam) குற்றமற்றவர் என்று ஒப்புக்கொண்ட நிலையில் அவரது விசாரணை மாத்திரம் தனித்தனியாக நடைபெறும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
விஜய்க்கு பொண்டாட்டியா கூட இருப்போம்... ரசிகையின் பரபரப்பு பேச்சால் அதிர்ச்சியில் ரசிகர்கள்! Manithan
அடிபட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் அண்ணாமலை.. குடும்பத்தை விட்டு வெளியேறும் மீனா.. சிறகடிக்க ஆசை சீரியல் புரோமோ வீடியோ Cineulagam
ஈரான் உச்ச தலைவர் அலி காமெனி குடும்பத்துடன் கொல்லப்பட்டார்: ஈரான் அரசு ஊடகம் அறிவிப்பு News Lankasri
ஈரான் போர்.. துபாயில் சிக்கி தவிக்கும் இந்திய நடிகைகள்! பிரதமர் மோடிக்கு உருக்கமான வேண்டுகோள் Cineulagam