தமிழ் பொது வேட்பாளருக்கு வாக்களிக்க தமிழர்கள் உறுதி எடுக்க வேண்டும் : சி.வி.விக்னேஸ்வரன் தெரிவிப்பு

Sri Lanka C. V. Vigneswaran Sri Lanka Presidential Election 2024
By Theepan Jul 22, 2024 05:48 AM GMT
Report

தமிழ் மக்கள் கூட்டணியின் தேசிய மகாநாட்டில் நாங்கள் யாவரும் தமிழ்ப் பொது வேட்பாளருக்கு எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் எமது வாக்குகளை அளிப்போம் என்று உறுதி பூணுவோம் என கட்சியின் செயலாளர் நாயகமும் நாடாளுமன்ற உறுப்பினருமான சி.வி.விக்னேஸ்வரன் (C.V.Vigneswaran) தெரிவித்துள்ளார்.

தமிழ் மக்கள் கூட்டணியின் முதலாவது தேசிய மகாநாட்டில் உரையாற்றிய போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இரண்டு வாரங்களுக்கான கற்பித்தல் நடவடிக்கை தொடர்பில் வெளியான அறிவிப்பு

இரண்டு வாரங்களுக்கான கற்பித்தல் நடவடிக்கை தொடர்பில் வெளியான அறிவிப்பு


பிழையான கருத்துக்கள்

மேலும் குறிப்பிடுகையில், “எமது முதலாவது தேசிய மகாநாட்டுக்கு இங்கு வந்திருக்கும் உங்கள் அனைவருக்கும் எமது வரவேற்பையும் அன்பையும் தெரிவித்து என் உரையைத் தொடங்குகின்றேன்.

தமிழ் பொது வேட்பாளருக்கு வாக்களிக்க தமிழர்கள் உறுதி எடுக்க வேண்டும் : சி.வி.விக்னேஸ்வரன் தெரிவிப்பு | Our Vote Tamil General Candidat Cv Vigneswaran

நாம் எமது தேசிய மகாநாட்டை நடத்த வேண்டும் என்று முடிவெடுத்த போது சம்பந்தன் உயிருடன் இருந்தார். இன்று அவர் இல்லையே என்ற மனோநிலை பிரதிபலிக்கின்றது.

எது எவ்வாறிருப்பினும் அரசியலில் விருப்பமில்லாத என்னை அரசியலுக்குக் கொண்டு வந்தவர் சம்பந்தனே. அவர் செய்த செயலால் இன்று நீதித்துறை, நிறைவேற்றுத்துறை, சட்டவாக்கத்துறை மூன்றிலும் அங்கம் வகித்த ஒருவர் என்ற பெருமை என்னைத் தேடி வந்துள்ளது. அவரை இத்தருணத்தில் நினைவு கூருவது சாலப் பொருந்தும் என்று நினைக்கின்றேன்.

நாம் யாவரும் தமிழர்களாக சிந்தித்தால் எமது வாரிசுகளின் வருங்காலம் பற்றிய கரிசனை எம்மை கட்டாயமாக ஆட்கொள்ளும். “நாங்கள் இன்று சொகுசாக வாழ்ந்துவிட்டுப் போவோம், நாளை எமது பிள்ளைகளுக்கும், தமிழ் மக்களுக்கும் என்ன நடந்தால் எமக்கென்ன” என்று சிந்திப்பவர்கள் தான் பல பிழையான கருத்துக்களை தமிழ் மக்களிடையே விதைத்து வருகின்றார்கள். 

வெளிநாட்டில் இருந்து வந்த சகோதரனுக்கு திருமணம் - ஹோட்டலில் உயிரிழந்த தங்கை

வெளிநாட்டில் இருந்து வந்த சகோதரனுக்கு திருமணம் - ஹோட்டலில் உயிரிழந்த தங்கை

தமிழ்ப் பொது வேட்பாளர்

இந்நாட்டில் எமது சிங்கள வேட்பாளருக்குத் தமிழ் மக்கள் வாக்களித்தால் அது ஒற்றுமையாகாது. அது சிறுபான்மையினரின் பயத்தின் அறிகுறியே.

எமக்கு ஒரு அரசியல் யாப்பு உதயமாக வேண்டும். தமிழ்ப்பேசும் மக்கள் வேண்டுவது ஒற்றையாட்சி அரசியல் யாப்பின் கீழான 13வது திருத்தச் சட்டத்தை அல்ல. எமக்கு சர்வதேசச் சட்டத்தின் கீழ் தரப்பட்டிருக்கும் சுயநிர்ணய உரிமையையே நாங்கள் கேட்கின்றோம்.

தமிழ்ப் பொது வேட்பாளர் இந்தக் கருத்தையே தமிழ்ப்பேசும் மக்களிடையே முன்னிறுத்த இருக்கின்றார்.

தமிழ் பொது வேட்பாளருக்கு வாக்களிக்க தமிழர்கள் உறுதி எடுக்க வேண்டும் : சி.வி.விக்னேஸ்வரன் தெரிவிப்பு | Our Vote Tamil General Candidat Cv Vigneswaran

ஐக்கிய நாடுகள் மக்கள் தீர்ப்பைக் கோரி தேர்தல் நடத்தட்டும். தமிழ்ப்பேசும் மக்கள் எதனைக் கோருகின்றார்களோ அதனை வழங்க ஐக்கியநாடுகள் முன்வரவேண்டும் என்ற கருத்தை சர்வதேசத்தின் முன் முன்னிலைப்படுத்தவே தமிழ் பொது வேட்பாளர் காத்து நிற்கின்றார்.

ஆகவே எங்களுடைய கட்சியின் இந்த தேசிய மகாநாட்டில் நாங்கள் யாவரும் தமிழ்ப் பொது வேட்பாளருக்கு எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் எங்களின் வாக்குகளை அளிப்போம் என்று உறுதி பூணுவோமாக!

இது பற்றிய தீர்மானம் இன்று சமர்ப்பிக்கப்பட இருக்கின்றது. எமது அரசியல் குறிக்கோள்களைப் பிரதிபலிக்கும் தீர்மானங்களும் இன்று சமர்ப்பிக்கப்படுகின்றன.அவற்றை எம்மவர் ஒரு மனதாக இன்று ஏற்றுக் கொள்வார்கள் என்று நம்புகின்றேன்” என்றும் சி.வி.விக்னேஸ்வரன் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையில் பெரும் சோகம் - தாய் மற்றும் பிள்ளைகள் சடலமாக மீட்பு

இலங்கையில் பெரும் சோகம் - தாய் மற்றும் பிள்ளைகள் சடலமாக மீட்பு

மக்களுக்காக அறிமுகப்படுத்தப்படும் அரசாங்கத்தின் புதிய திட்டங்கள்

மக்களுக்காக அறிமுகப்படுத்தப்படும் அரசாங்கத்தின் புதிய திட்டங்கள்

 நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, வள்ளிபுனம்

30 Sep, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை தெற்கு, கொழும்பு

29 Oct, 2024
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, கொழும்பு

26 Oct, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், இராமநாதபுரம், Villetaneuse, France

27 Oct, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை, சிட்னி, Australia

28 Oct, 2015
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, வவுனிக்குளம், பருத்தித்துறை

26 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு, London, United Kingdom

27 Oct, 2024
14ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொழும்பு, கனடா, Canada

27 Oct, 2011
13ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, வல்வெட்டித்துறை, Shrewsbury, United Kingdom

28 Oct, 2012
6ம் ஆண்டு நினைவஞ்சலி

Edmonton, United Kingdom, England, United Kingdom

27 Oct, 2019
6ம் ஆண்டு நினைவஞ்சலி

குடத்தனை, முகமாலை, பரந்தன்

28 Oct, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, கரம்பொன், Hamburg, Germany, Newbury Park, United Kingdom

27 Oct, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, யாழ்ப்பாணம், Morden, United Kingdom

27 Oct, 2024
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், வெள்ளவத்தை

24 Oct, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, சுன்னாகம், London, United Kingdom

27 Oct, 2015
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Den Helder, Netherlands

21 Oct, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய், கொழும்பு, Birmingham, United Kingdom

26 Oct, 2023
மரண அறிவித்தல்

அச்சுவேலி, வெள்ளவத்தை, Pinner, United Kingdom

24 Oct, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் களபூமி, London, United Kingdom, கொழும்பு

26 Oct, 2019
6ம் ஆண்டு நினைவஞ்சலி

பூந்தோட்டம், மகாறம்பைக்குளம்

31 Oct, 2019
11ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மூளாய், London, United Kingdom

17 Oct, 2025
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, London, United Kingdom

06 Oct, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Le Blanc-Mesnil, France

18 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US