மாணவர் சமூகம் எமது வளங்களை நிர்ணயிக்கின்ற சக்திகளுள் ஒன்றாக திகழ்கின்றது!- த.கலையரசன்

Students
By Independent Writer Feb 19, 2021 09:27 PM GMT
Independent Writer

Independent Writer

in இலங்கை
Report

மாணவர் சமூகம் என்பது எமது வளங்களை நிர்ணயிக்கின்ற சக்திகளுள் ஒன்றாகத் திகழ்கின்றது. கிழக்கு மாகாணத்தில் எமது மாணவர்களின் எண்ணிக்கை மிகவும் குறைந்த அளவிலேயே காணப்பட்டு கொண்டிருக்கின்றது.

இந்த விடயம் எதிர்காலத்தில் எமக்குப் பாரிய சவாலாக அமையும் எனத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் தவராசா கலையரசன் தெரிவித்துள்ளார்.

இன்றைய தினம் திருக்கோவில் கல்வி வலயத்திற்குட்பட்ட கண்ணகிபுரம், கண்ணகி வித்தியாலயத்தில் க.பொ.த உயர்தர கலைப்பிரிவு ஆரம்பிக்கும் நிகழ்வில் அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், இப்பிரதேசத்திலே கடந்த காலங்களில் க.பொ.த சாதாரண தரத்துடன் பல மாணவர்கள் இடைவிலகலை மேற்கொள்வதாகத் தகவல்கள் எமக்குக் கிடைத்தன.

அந்த வகையில் அதற்கெல்லாம் ஒரு முடிவு இன்று கிடைத்திருக்கின்றது. ஒரு பிரதேசத்தின் பாடசாலைகள் சிறப்பாக இயங்க வேண்டும் என்றால் அதனைத் தலைமை தாங்கி வழிநடத்துபவர்களின் கைகளிலேயே இருக்கின்றது.

அந்த வகையில் திருக்கோவில் வலயக்கல்விப் பணிப்பாளர் மிகவும் சாதுரியமான, சமூகத்தில் அக்கறை கொண்ட அதிகாரியாகச் செயற்படுகின்றார். அதேபோன்று தான் இப்பாடசாலையின் அதிபர் அவர்களும். இவர்கள் கிடைக்கப் பெற்றிருப்பதோடு இப்பிரதேச மாணவர்களின் கல்வி நிலை தன்நிறைவு அடையும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கின்றது.

இவ்வாறான பிரதேசங்களில் பாடசாலைகள் தரமுயர்த்தப்படுகின்ற போது எதிர்காலத்தில் சிறந்த கல்வியாளர்களை நாம் இங்கிருந்து உருவாக்க முடியும். தற்காலத்திலே க.பொ.த உயர்தரத்திலே இவ்வாறான பின்தங்கிய பிரதேசத்திலிருந்துதான் கூடுதலான மாணவர்கள் தெரிவு செய்யப்பட்டு கொண்டிருக்கின்றார்கள்.

அதற்குக் காரணமென்னவென்றால் இந்தப் பிரதேசத்தில் இருக்கின்ற பிள்ளைகள், பெற்றோர்களுக்கு தான் தெரியும் கஷ்டத்தின் மத்தியில் கல்வியின் தேவைப்பாடு. அந்த வகையில் இந்தப் பிரதேசங்களின் பெற்றோர்களும் அதிக அக்கறையுடன் செயற்படுவது போன்று இப்பிரதேசங்களுக்குக் கல்வி கற்பிக்க வருகின்ற ஆசிரியர்களும் மிகவும் அர்ப்பணிப்போடு செயற்படுகின்றார்கள்.

இன்றைய தினம் கலைப்பிரிவு ஆரம்பிக்கப்பட்டிருந்தாலும் எதிர்வரும் காலங்களில் இதற்கான வெளியீடுகளை மிகச்சிறப்பாக வெளிப்படுத்த வேண்டும். அவ்வாறு வருகின்ற போதுதான் இதனை அடுத்தகட்டத்திற்கு நகர்த்த முடியும். மாணவர் சமூகம் என்பது எமது வளங்களை நிர்ணயிக்கின்ற சக்திகளுள் ஒன்றாகத் திகழ்கின்றது.

எமது சமூகத்தைப் பொறுத்தவரையில், கல்வியும், விவசாயமும் வீழ்ச்சியடைந்து போவதைக் காணக்கூடியதாக இருக்கின்றது. தற்காலத்தில் கிழக்கு மாகாணத்தில் எமது மாணவர்களின் எண்ணிக்கை மிகவும் குறைந்த அளவிலேயே காணப்பட்டு கொண்டிருக்கின்றது.

இந்த விடயம் எதிர்காலத்தில் எமக்குப் பாரிய சவாலாக அமையும். ஏனெனில் வளங்கள் பகிர்ந்தளிக்கப்படுகின்ற பொழுது அந்த மாணவர் தொகை பார்க்கப்படுகின்றது. அதன் காரணமாக எமக்குக் கிடைக்கப்படுகின்ற வளங்களும் குறையும் சந்தர்ப்பம் இருக்கின்றது.

எமது வடக்கு கிழக்கில் ஏற்படுத்தப்பட்ட யுத்தத்தினால் பொருளாதார ரீதியாக மாத்திரமல்ல, அரசியல் மற்றும் இன ரீதியான விகிதாரசாரத்திலும் மிகவும் பின்னோக்கிய ஒரு நிலையிலேயே எமது தமிழ்ச் சமூகம் சென்றுள்ளது.

இந்த நாட்டிலே வடக்கு, கிழக்கு பிரதேசங்களிலே நாங்கள் எமது இருப்புக்காகப் போராடி இன்று எமது இனரீதியான விகிதாசாரம் மிகவும் குறைக்கப்பட்ட ஒரு நிலைமையில் நிற்கின்றோம்.

தற்போது இருக்கின்ற எமது பொருளாதாரம் ஒரு பிரச்சினையாக இருந்தாலும் எமது மக்கள் அந்த விடயத்திலே அக்கறையுடன் செயற்பட வேண்டும். எதிர்காலத்திலே நாங்கள் எமது பிரதேசங்களில் நிலையாக வாழ வேண்டும் என்றால் எமது அரசியல், கல்வி,பொருளாதாரம், அபிவிருத்தி என்ற ரீதியில் நாங்கள் முன்னோக்கிப் போகவேண்டியவர்களாக இருக்கின்றோம்.

அத்துடன், கல்வி ரீதியில் உயர் பதவிகளில் இருப்பவர், அரசியலாளர்கள் அனைவரும் ஒன்றிணைந்து எமது சமூக ரீதியான திட்டமிடலை மேற்கொள்ள வேண்டும். இல்லையென்றால் எமது நிலைமை இன்னும் மோசமாகி விடும்.

கிழக்கு மாகாணத்திலே தமிழர்கள் கல்வி நிலையில் முன்னேற்றம் கண்டுள்ளார்கள் என்ற காரணத்தினால் சமப்படுத்தல் என்ற விடயத்தைக் கொண்டு வந்தார்கள். 2015ம் ஆண்டுக்கு முன்னர் இந்த விடயத்தினால் மிகப் பாரிய அனர்த்தம் ஏற்படுத்தப்பட்டது.

அதனை நாங்கள் அப்போது தட்டிக் கேட்டோம். அவ்வாறு தட்டிக்கேட்ட போது மாகாணசபையைக் கூட நடத்தாமல் இழுத்து மூடிய வரலாறுகளும் உண்டு. எனவே நாங்கள் எமது சமூகத்தின் விடயங்கள் தொடர்பில் மிகவும் நிதானமாக ஜனநாயக ரீதியில் போராட வேண்டிய நிலைப்பாடு காணப்படுகின்றது.

எனவே பெற்றோர்களே எதிர்காலத்தில் உங்கள் பிள்ளைகளை நல்ல கல்வியலாளர்களாக உருவாக்கி எமது பிரதேசங்களில் உங்கள் பிள்ளைகள் பணி செய்யக் கூடிய வகையிலே செயற்பட வேண்டும்.

நாங்கள் மாற்றுச் சமூகத்தைப் பற்றிக் கதைப்பதில் எவ்வித பயனும் இல்லை. நாம் தான் எமது மக்களை முன்னேற்றுவதற்குரிய செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டும். இந்த நாட்டின் பெரும்பான்மை சிங்கள அரசு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை எதிரிகளாகவே பார்க்கின்றார்கள்.

நாங்கள் எங்கள் மக்களின் ஜனநாயக உரிமையைக்கேட்கும் போது. அவர்கள் எங்களை வித்தியாசமான முறையிலே கையாளுகின்றார்கள். ஏனெனில் இந்த நாட்டிலே முன்னெடுக்கப்படுகின்ற ஒவ்வொரு விடயமும் எமக்குப்பாதகமானதாகவே முன்னெடுக்கப்படுகின்றது.

இந்த நாட்டிலே யுத்தம் முடிந்த கையோடு நாங்கள் சமாதானத்தை விரும்பினோம். சமாதானத்தை ஏற்படுத்தும் எவ்வித செயற்பாடுகளையும் இந்த அரசாங்கம் கையாளவில்லை. எங்களை எதிரிகளாகவும், அடிமைகளாகவுமே கையாளுகின்ற நிலைமையே இருக்கின்றது.

நாங்களும் முடிந்தவரை ஜனநாயக ரீதியான போராட்டங்களை முன்னெடுத்து எமது மக்களின் உரிமைகளைவென்றெடுப்போம் என்ற அடிப்படையிலே செயற்படுகின்றோம் என்று தெரிவித்துள்ளார்.

GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுவில், Chingford, United Kingdom

22 Jul, 2024
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, அராலி வடக்கு, யாழ்ப்பாணம், helsinki, Finland

20 Jul, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, யாழ்ப்பாணம், Pickering, Canada

20 Jul, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணம், பம்பலப்பிட்டி

20 Jun, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், Jaffna, யாழ் கொட்டடி சீனிவாசகம் வீதி, Jaffna, Northwood, United Kingdom

24 Jul, 2022
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் கிழக்கு, கொட்டாஞ்சேனை

21 Jul, 2022
3ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், Markham, Canada

22 Jul, 2022
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணம், திருகோணமலை, நீராவியடி

22 Jun, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வசாவிளான், Jaffna, குப்பிளான்

21 Jul, 2015
மரண அறிவித்தல்

கோண்டாவில், புன்னாலைக்கட்டுவன், சவுதி அரேபியா, Saudi Arabia, ஜேர்மனி, Germany, Brampton, Canada

20 Jul, 2025
மரண அறிவித்தல்

கோண்டாவில், London, United Kingdom

11 Jul, 2025
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, Scarborough, Canada

24 Jul, 2022
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Kettenkamp, Germany

17 Jul, 2025
13ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

20 Jul, 2012
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெல்லியடி, வெள்ளவத்தை

21 Jul, 2015
மரண அறிவித்தல்

மயிலிட்டி வடக்கு, Villiers-le-Bel, France

14 Jul, 2025
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, செங்காளன், Switzerland

16 Jul, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பேர்ண், Switzerland

21 Jul, 2018
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, East Ham, United Kingdom

24 Jul, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு

17 Jul, 2020
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், Zürich, Switzerland

24 Jul, 2022
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, யோகபுரம், டென்மார்க், Denmark, ஜேர்மனி, Germany, Coventry, United Kingdom

13 Jul, 2025
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, Paris, France

15 Jul, 2025
மரண அறிவித்தல்

நவிண்டில், Bromley, United Kingdom

15 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு 7ம் வட்டாரம், London, United Kingdom

19 Jul, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு கிழக்கு, பெரியதம்பனை, வவுனியா

20 Jul, 2015
12ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சரவணை கிழக்கு, Stains, France

22 Jun, 2025
17ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுவில், பிரித்தானியா, United Kingdom

18 Jul, 2008
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புத்தூர், Frutigen, Switzerland

17 Jul, 2024
மரண அறிவித்தல்

வீமன்காமம், வட்டகச்சி, Carshalton, United Kingdom

15 Jul, 2025
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, சித்தன்கேணி, London, United Kingdom

10 Jul, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கொழும்பு

19 Jul, 2019
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US