பல சமூக சேவைகளை புரிந்த பேராயர் ஓஸ்வால்ட் கோமிஸ் ஆண்டகை(Video)
உடல் நலக்குறைவு காரணமாக கொழும்பு தனியார் வைத்தியசாலை ஒன்றில் சிகிச்சை பெற்று வந்த கொழும்பு ஓய்வுநிலை பேராயர் ஓஸ்வால்ட் கோமிஸ் ஆண்டகை கடந்த 3 ஆம் திகதி தனது 90 ஆவது வயதில் உயிரிழந்தார்.
ஆண்டகையின் பூதவுடல் இறுதி சடங்கு ஆராதனைகளுக்காக நேற்று கொட்டாஞ்சேனை புனித லூசியா பேராலயத்திற்கு கொண்டுவரப்பட்டது.
ஆண்டகையின் பூதவுடல் கடந்த 3 ஆம் திகதி ஆயர் இல்லத்திற்கு எடுத்து செல்லப்பட்டதுடன் அங்கு கொழும்பு பேராயர் கலாநிதி மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகையின் தலைமையில் விசேட ஆராதனை இடம்பெற்றது.
பல சமூக சேவைகளை புரிந்த பேராயர் ஓஸ்வால்ட் கோமிஸ் ஆண்டகை பற்றிய தகவல்களை இந்த காணொளியில் முழுமையாக காணலாம்,