குடிவரவு, குடியகல்வு கட்டுப்பாட்டாளருக்கு விளக்கமறியல் உத்தரவு

Government Of Sri Lanka Supreme Court of Sri Lanka Department of Immigration & Emigration
By Sivaa Mayuri Sep 25, 2024 11:59 AM GMT
Report
Courtesy: Sivaa Mayuri

புதிய இணைப்பு

குடிவரவு குடியகல்வு கட்டுப்பாட்டாளர் நாயகம் ஹர்ச இலுக்பிட்டியவை விளக்கமறியலில் வைக்குமாறு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த கால ரணில் அரசாங்கத்தில் நடைமுறைப்படுத்தப்பட்ட இலங்கையில் இணையவழி மற்றும் வெளிநாட்டு விசா நடவடிக்கைகளுக்கு அனுமதி வழங்கும் அமைச்சரவை தீர்மானத்தை இடைநிறுத்தும் வகையிலான இடைக்காலத் தடைஉத்தரவொன்றை பிறப்பிக்குமாறு கோரி, உச்சநீதிமன்றத்தில் வழக்கொன்று தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான ரவூப் ஹக்கீம், எம்.ஏ.சுமந்திரன் மற்றும் பாட்டலி சம்பிக்க ரணவக ஆகியோர் இந்த மனுவைத் தாக்கல் செய்திருந்தனர்.

லங்காசிறி ஊடக அனுசரணையில் கோலாகலமாக இடம்பெறும் தமிழர் விளையாட்டு விழா

லங்காசிறி ஊடக அனுசரணையில் கோலாகலமாக இடம்பெறும் தமிழர் விளையாட்டு விழா


உச்சநீதிமன்ற விசாரணை

குறித்த மனுவை விசாரணைக்கு எடுத்துக் கொண்ட உச்சநீதிமன்றம், இலங்கையில் இணையவழி மற்றும் வெளிநாட்டு விசா நடவடிக்கைகளுக்கு அனுமதி வழங்கும் அமைச்சரவை தீர்மானத்தை இடைநிறுத்தும் வகையில், ஏற்கனவே உத்தரவு பிறப்பித்திருந்தது.

குடிவரவு, குடியகல்வு கட்டுப்பாட்டாளருக்கு விளக்கமறியல் உத்தரவு | Order To Detain The Comptroller Of Immigration

எனினும், குடிவரவு குடியகல்வு கட்டுப்பாட்டாளர் நாயகம் ஹர்ச இலுக்பிட்டியவை 2024 ஓகஸ்ட் 2ஆம் திகதி உச்ச நீதிமன்றத்தின் இடைக்கால உத்தரவை நடைமுறைப்படுத்தத் தவறிவிட்டார் என்று அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுளளது.

குறித்த குற்றச்சாட்டில் இன்றைய தினம் ஹர்ச இலுக்பிட்டிய உச்சநீதிமன்றத்தின் வழக்கு விசாரணைக்கு அழைக்கப்பட்டிருந்தார். இதன் போது நீதிமன்றத்தை அவமதித்ததாக ஹர்ஷ இலுக்பிட்டிய மீது குற்றம் சுமத்தப்பட்டது.

இதன்போது அவரது சார்பில் முன்னிலையான ஜனாதிபதி சட்டத்தரணி பாயிஸ் முஸ்தபா, தனது கட்சிக்காரர் உச்சநீதிமன்றத்தின் உத்தரவை நடைமுறைப்படுத்த பல தடவைகள் முயற்சிகளை மேற்கொண்டதாகவும், எனினும் முடியாது போய்விட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

உத்தரவு நடைமுறை

அத்துடன் எதிர்வரும் ஒரு வாரத்திற்குள் குறித்த உத்தரவை நடைமுறைப்படுத்த தனது கட்சிக்காரர் நடவடிக்கை மேற்கொள்வார் என்றும் அவர் உறுதியளித்தார்.

குடிவரவு, குடியகல்வு கட்டுப்பாட்டாளருக்கு விளக்கமறியல் உத்தரவு | Order To Detain The Comptroller Of Immigration

எனினும் ஹர்ச இலுக்பிட்டிய முன்னதாக உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள பதில் மனுவில் உச்சநீதிமன்றத்தின் இடைக்கால தடை உத்தரவை நடைமுறைப்படுத்த முடியாது என்று குறிப்பிட்டிருந்தாக மனுதாரர்களின் சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் சுட்டிக்காட்டினார்.

இதனையடுத்து ஹர்ச இலுக்பிட்டியவை விளக்கமறியலில் வைக்குமாறு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பிரீதி பத்மன் சூரசேன, அசல வெங்கப்புலி, குமுதுனி விக்கிரமசிங்க ஆகியோரைக் கொண்ட உச்சநீதிமன்ற மூவர் அடங்கிய அமர்வு இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது 

செய்தி - அஸ்ரப்

முதலாம் இணைப்பு

இன்று மாலை நீதிமன்ற நடவடிக்கைகள் ஆரம்பிக்கும் வரை குடிவரவு குடியகல்வு கட்டுப்பாட்டாளரை, நீதிமன்ற வளாக சிறையில் தடுத்து வைக்குமாறு உயர் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது. 

இதற்கு முன்னதாக, இன்று (25.09.2024) காலையில், நீதிமன்றத்தை அவமதித்ததாக குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டாளர் ஜெனரல் ஹர்ஷ இலுக்பிட்டிய மீது குற்றம் சுமத்துவதற்கான விதியை, இலங்கை உயர் நீதிமன்றம்  வெளியிட்டது. 

அமைச்சரவை தீர்மானம் 

அதேவேளை,  இலங்கையில் இணையம் மற்றும் வெளிநாட்டு விசா நடவடிக்கைகளுக்கு அனுமதி வழங்கும் அமைச்சரவை தீர்மானத்தை இடைநிறுத்தும் வகையில், நீதிமன்றம் ஏற்கனவே உத்தரவு பிறப்பித்திருந்தது.

குடிவரவு, குடியகல்வு கட்டுப்பாட்டாளருக்கு விளக்கமறியல் உத்தரவு | Order To Detain The Comptroller Of Immigration

எனினும், முதலாவது பிரதிவாதியான இலுக்பிட்டிய, 2024 ஆகஸ்ட் 2ஆம் திகதி உயர் நீதிமன்றத்தின் இடைக்கால உத்தரவை நடைமுறைப்படுத்தத் தவறிவிட்டார் என்பதே குற்றச்சாட்டாகும்.

இந்தியா - சீனாவுடனான உறவு நிலை குறித்து ஜனாதிபதி வெளியிட்ட தகவல்

இந்தியா - சீனாவுடனான உறவு நிலை குறித்து ஜனாதிபதி வெளியிட்ட தகவல்

முல்லைத்தீவில் நாட்டுத்துப்பாக்கியுடன் ஒருவர் கைது!

முல்லைத்தீவில் நாட்டுத்துப்பாக்கியுடன் ஒருவர் கைது!

 நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW
நன்றி நவிலல்
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, London, United Kingdom

06 Oct, 2025
மரண அறிவித்தல்

அச்சுவேலி, வெள்ளவத்தை, Pinner, United Kingdom

24 Oct, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், வெள்ளவத்தை

24 Oct, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, வள்ளிபுனம்

30 Sep, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை தெற்கு, கொழும்பு

29 Oct, 2024
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, கொழும்பு

26 Oct, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, Toronto, Canada

29 Oct, 2020
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், இராமநாதபுரம், Villetaneuse, France

27 Oct, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை, சிட்னி, Australia

28 Oct, 2015
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, வவுனிக்குளம், பருத்தித்துறை

26 Oct, 2025
14ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொழும்பு, கனடா, Canada

27 Oct, 2011
13ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, வல்வெட்டித்துறை, Shrewsbury, United Kingdom

28 Oct, 2012
6ம் ஆண்டு நினைவஞ்சலி

Edmonton, United Kingdom, England, United Kingdom

27 Oct, 2019
6ம் ஆண்டு நினைவஞ்சலி

குடத்தனை, முகமாலை, பரந்தன்

28 Oct, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, கரம்பொன், Hamburg, Germany, Newbury Park, United Kingdom

27 Oct, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, யாழ்ப்பாணம், Morden, United Kingdom

27 Oct, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, சுன்னாகம், London, United Kingdom

27 Oct, 2015
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Den Helder, Netherlands

21 Oct, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய், கொழும்பு, Birmingham, United Kingdom

26 Oct, 2023
6ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் களபூமி, London, United Kingdom, கொழும்பு

26 Oct, 2019
6ம் ஆண்டு நினைவஞ்சலி

பூந்தோட்டம், மகாறம்பைக்குளம்

31 Oct, 2019
11ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மூளாய், London, United Kingdom

17 Oct, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Le Blanc-Mesnil, France

18 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US