பதில் ஜனாதிபதி பாதுகாப்பு தரப்பினர்களிற்கு பிறப்பித்துள்ள உத்தரவு
ஜனாதிபதியை தெரிவு செய்வதில் நாடாளுமன்ற உறுப்பினர்களின் சுதந்திரமாக வாக்களிக்கும் உரிமைக்கு சமூக வலைத்தளங்கள் ஊடாக செல்வாக்கு செலுத்துபவர்கள் தொடர்பில் விசாரணை நடத்துமாறு பதில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பணிப்புரை விடுத்துள்ளார்.
சமூக ஊடகங்கள் ஊடாக விடுக்கப்படும் அச்சுறுத்தல்களினால் சுதந்திரமாக வாக்களிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர்கள் விடுத்த அறிவித்தலை கருத்திற்கொண்டு பதில் ஜனாதிபதி பாதுகாப்பு தரப்பினருக்கு இந்த பணிப்புரையை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன்படி, நாடாளுமன்ற அதிகாரங்கள் மற்றும் சிறப்புரிமைகள் சட்டம் மற்றும் அது தொடர்பான குற்றவியல் சட்டங்களின் கீழ் இது தொடர்பான சம்பவங்களை விசாரிக்குமாறு அவர் அறிவித்துள்ளார்.
நேற்றுறைய தினம் (16.07.2022) லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய இராணுவ ஆய்வாளர் பிரித்தானியாவின் வேல்ஸ் இல் இருந்து அரூஸ் அவர்கள் நாடாளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாப்பு விடயங்களுக்கு பதில் ஜனாதிபதி புதிய நடவடிக்கை எடுப்பதற்கு அதிக வாய்ப்புக்கள் உள்ளதாக குறிப்பிட்டிருந்த நிலையில் இன்றைய தினம் பதில் ஜனாதிபதியால் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தொடர்பான உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

ஒரு தீவு இரு நினைவு நாட்கள் 4 நாட்கள் முன்

டிஆர்பி முதல் இடத்தை பிடித்த ஹிட் சீரியல், கீழ் இறங்கிய சிங்கப்பெண்ணே.. டாப் 5 சீரியல்களின் விவரம் Cineulagam

சாணக்கிய நீதி: இந்த பழக்கம் இருப்பவர்கள் வாழ்வில் வெற்றியடைவது உறுதி... உங்களிடமும் இருக்கா? Manithan

சாம்சங்கில் அதிக சம்பளம் வாங்கும் வேலையை விட்டுவிட்டு.., UPSC தேர்வில் வெற்றி பெற்ற நபர் யார்? News Lankasri
