உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் தொடர்பில் கைது செய்யப்பட்டவர்களுக்கு நீதிமன்றம் வழங்கிய உத்தரவு
உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் தொடர்பாக காத்தான்குடி பிரதேசத்தில் கைது செய்யப்பட்டுத் தொடர்ந்து விளக்கமறியல் வைக்கப்பட்டிருந்த 60 பேரில் 5 பேரை இன்று(22) பிணையில் செல்லுமாறு நீதிமன்றம் உத்தரவிடப்பட்டுள்ளது.
ஏனையவர்களைத் தொடர்ந்து மே 4 ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதிமன்ற நீதவான் பீற்றர்போல் உத்தரவிட்டார்.
கடந்த 21.4.2019 அன்று உயிர்த்த ஞாயிறன்று இடம்பெற்ற தாக்குதலின் பின்னர் ஸஹ்றான் குழுவோடு தொடர்புடையவர்கள் என்றும், இவர்கள் ஹம்பாந்தோட்டை மற்றும் நுவரெலியா போன்ற இடங்களுக்குப் பயிற்சிக்காக சென்ற சந்தேகத்தில் காத்தான்குடியை சேர்ந்தவர்கள் மற்றும் சஹரானின் சகோதரி மற்றும் அவரின் கணவர், உட்பட 69 பேரை கைது செய்தனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களுக்கு எதிராக காத்தான்குடி மற்றும் மட்டக்களப்பு தலைமையக பொலிஸார் நான்கு வெவ்வேறு இலக்கம் கொண்ட வழக்கு தாக்கல் மேற்கொண்டனர். இவர்கள் அனைவரும் தொடர்ந்து விளக்க மறியலில் வைக்கப்பட்டனர்.
இதில் ஸாரானின் சகோதரி மற்றும் அவரின் கணவர், ஆகியோரது வழக்குகள் நீதவான் நீதிமன்றிலிருந்து உயர் நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டதுடன் 5 பேர் வழக்கிலிருந்து விடுவித்து விடுதலை செய்யப்பட்டதுடன் இருவர் பிணையில் விடுதலை செய்யப்பட்டதையடுத்து 60 பேரும் நாட்டிலுள்ள பொலன்னறுவை, அனுதாரபுரம், கேகாலை, திருகோணமலை, போன்ற சிறைச்சாலைகளில் அடைக்கப்பட்டுத் தொடர்ந்து விளக்க மறியலில் வைக்கப்பட்டனர்.
இந்த நிலையில் இன்று(22) மட்டக்களப்பு நீதிமன்ற நீதவான் முன்னிலையில் இந்த வழக்கு விசாரணைக்கு எடுக்கப்பட்டபோது பலத்த பாதுகாப்புடன் சிறைச்சாலையில் அழைத்துவரப்பட்ட 9 பேரையும் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட போது இதில் 5 பேரை தலா ஒருவருக்கு 50 லட்சம் ரூபா பெறுமதியான சரீரப்பிணையும்,மாதாந்தம் 2 ம் மற்றும் 3 ம் கிழமைகளில் உள்ள ஞாயிற்றுக்கிழமையில் பிற்பகல் 4 மணிக்கும் 6 மணிக்கும் இடையில் காத்தான்குடி பொலிஸ் நிலையத்திற்குச் சென்று கையெழுத்து இடுமாறு உத்தரவிட்டு பிணையில் விடுவித்தனர்.
அதேவேளை ஏனைய 55 பேரையும் தொடர்ந்து மே மாதம் 4 ம் திகதி வரை விளக்க மறியலில் வைக்குமாறு காணொளி மூலம் நீதவான் உத்தரவிட்டார்.





ஷாக்கிங் விஷயத்தை கூறிய செந்தில், கோபத்தில் திட்டிவிட்ட மீனா... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 புரொமோ Cineulagam

உங்கள் குடும்பத்தை பிரித்தானியாவுக்கு அழைத்துக்கொள்ள விரும்புகிறீர்களா? உங்களுக்கு சில முக்கிய தகவல்கள் News Lankasri
