ஜனாதிபதி பொலிஸ் மா அதிபருக்கு பிறப்பித்துள்ள கடுமையான உத்தரவு
நாட்டில் அமுல்படுத்தப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டத்தை கடுமையாக அமுல்படுத்துமாறு ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ச, பொலிஸ் மா அதிபர் சீ.டி. விக்ரமரட்னவிற்கு உத்தரவு பிறப்பித்துள்ளார்.
தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டத்தை மீறும் மற்றும் சுகாதார வழிகாட்டல்களை பின்பற்றத் தவறும் நபர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளார்.
கோவிட் தடுப்பு செயலணியுடன் நடைபெற்ற இன்றைய கூட்டத்தில் ஜனாதிபதி இந்த விடயத்தை வலியுறுத்தியுள்ளார்.
அத்தியாவசிய பொதுச்சேவைகள் செயற்பட வேண்டியது அவசியமானது எனவும்,அதற்கான நடவடிக்கைகளை நிறுவனத் தலைவர்கள் எடுக்க வேண்டுமெனவும் ஜனாதிபதி வலியுறுத்தியுள்ளார்.