கோப் குழுவை புறக்கணிக்க எதிர்க்கட்சி தீர்மானம்
நாடாளுமன்றத்தின் அரசாங்க பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழுவை (COPE) புறக்கணிக்க எதிர்க்கட்சி தீர்மானித்துள்ளது.
ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் பி. பெரேரா இதனைத் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற கோப் குழுவுக்கு தலைவர் மற்றும் உறுப்பினர்களை நியமிப்பதில் காணப்பட்ட மரபுகளை தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் மீறியுள்ளது.
கோப் குழுத் தலைவர் பதவி
கோப் குழுத் தலைவர் பதவிக்கு நிஷாந்த சமரவீரவை, அரசாங்கம் ஆளுங்கட்சி உறுப்பினர்களின் ஆதரவுடன் நியமித்துக் கொண்டுள்ளது.
இவ்வாறாக நாடாளுமன்ற சம்பிரதாயங்களை மீறி நாடாளுமன்ற குழுக்களுக்கு தலைவர் மற்றும் உறுப்பினர்களை நியமிக்கும் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் நிலைப்பாட்டுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில், கோப் உள்ளிட்ட நாடாளுமன்றக் குழுக்கள் அனைத்தையும் புறக்கணிப்பது தொடர்பில் எதி்ர்க்கட்சி தீர்மானமொன்றை மேற்கொண்டுள்ளதாக அஜித் பீ. பெரேரா குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

அமெரிக்காவின் F-47, சீனாவின் J-35, ரஷ்யாவின் Su-57... உலகின் மிகவும் மேம்பட்ட போர் விமானம் எது? News Lankasri

முதல் முறையாக பிரான்சுக்கு வெளியே.., ரஃபேல் விமானத்தின் முக்கிய பாகம் இந்தியாவில் தயாரிப்பு News Lankasri

அதிரடியாக இந்த வாரம் மாறிய TRP ரேட்டிங் விவரம்.. டாப் 5ல் இடம்பெற்றுள்ள தொடர்கள் என்னென்ன? Cineulagam
