ஜேவிபியின் கொலை கலாசாரம் வெளிப்படுகின்றது! சஜித் பகிரங்க குற்றச்சாட்டு
தற்போதுள்ள முறைமையில் மாற்றத்தைக் கொண்டு வந்து, நீதி நியாயம் மற்றும் சட்டத்தின் ஆட்சியை நிலைநாட்டுவதாக உறுதியளித்து தற்போதைய அரசு கொண்டு வந்துள்ள புதிய முறைமை மாற்றத்தில், கொலை கலாசாரம் பரவலடைந்து, கொலை நடவடிக்கைகள் அதிகரித்து காணப்படுகின்றன என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.
தற்போது போட்டிக்கு மக்கள் கொல்லப்பட்டு வருகின்றனர். மக்கள் பிரதிநிதிகள் வெளியே சென்று மக்களுக்குச் சேவை ஆற்ற முடியாத நிலை எழுந்துள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.
சர்வாதிகார அரசாங்கம்
இத்தகைய சூழ்நிலைக்கு மத்தியில், அரசு பொய் சொல்லிக் கொண்டு, சமூகத்தை கொலைகாரர்கள், பாதாள உலகக் கும்பல்கள் மற்றும் கொலையாளிகளிடம் ஒப்படைத்துள்ளது.
அச்சுறுத்தல்களையும் மிரட்டல்களையும் விடுத்து, அரசாளுகையில் சர்வாதிகாரப் போக்கை ஊக்குவிக்கும் நடவடிக்கைகளிலும் ஈடுபட்டு வருகின்றது. அரசை மையமாகக் கொண்ட சர்வாதிகாரக் கட்டமைப்பை உருவாக்கி, ஜனநாயகத்தைக் குழிதோண்டிப் புதைக்கும் முயற்சிகளை தற்போது மேற்கொண்டு வருகின்றது என்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச சுட்டிக்காட்டினார்.
கொழும்பு, மட்டக்குளி பிரதேசத்தில் நேற்று நடைபெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ந்தும் அவர் தெரிவிக்கையில்,
ஐக்கிய மக்கள் சக்தியைச் சேர்ந்த வெலிகம தவிசாளர், தனது உயிருக்கு அச்சுறுத்தல்கள் இருப்பதாகக் கூறி, பொலிஸ் மா அதிபருக்கு எழுத்து பூர்வமாக கோரிக்கை விடுத்திருந்தார், ஆனாலும் இறுதியில் அவருக்கு பாதுகாப்பு வழங்கப்படாததால் அவர் கொலையாளிகளுக்குப் பலியானார்.
நாடாளுமன்ற உறுப்பினர் ஜகத் விதானாவுக்கும் கூட உயிருக்கு அச்சுறுத்தல்கள் விடுக்கப்பட்டுள்ளன. இந்த உயிர் அச்சுறுத்தல்களைப் பொலிஸார் வெளிப்படுத்தவில்லை. ஜகத் விதானதான் வெளிக்கொணர்ந்தார். இது குறித்து ஜகத் விதான பேசும்போது, பொலிஸ்மா அதிபர் நேரடியாகவே அவரைக் குற்றவாளியாக்கியுள்ளார்.

எதிர்க்கட்சியைச் சேர்ந்த உள்ளூராட்சி மன்றத் தவிசாளர்கள், உறுப்பினர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் உயிருக்கு அரசே பொறுப்பு. பாதுகாப்பை உறுதி செய்யுமாறு சபாநாயகருக்கு எழுத்துபூர்வமாக அறிவித்தும், வேண்டுகோள் விடுத்தும் இதுவரை எந்தப் பதிலும் இல்லை. நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டதாகத் தெரியவில்லை.
எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கு ஏதேனும் நடந்தால், அரசே பொறுப்புக் கூற வேண்டும். பொய்களை ஒதுக்கி வைத்துவிட்டு, சட்டம் - ஒழுங்கை நிலைநாட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இந்தக் கொலைகாரர்கள், போதைப்பொருள் கும்பல்கள் அல்லது திட்டமிட்ட குற்றச் செயல்களை மேற்கொண்டு வரும் கும்பல்களுடன் ஐக்கிய மக்கள் சக்தியினருக்கு எந்தவித தொடர்புகளும் இல்லை. இன்று சமூகத்தில் ஜனநாயகம் குழிதோண்டிப் புதைக்கப்பட்டுள்ளது. ஒரு பக்கம் கொலைக் கலாசாரம். மறுபக்கம் ஜே.வி.பி.யின் சர்வாதிகாரம் என குறிப்பிட்டுள்ளார்.

 
                                            
                                                                                                                                     
    
     
    
     
    
     
    
     
        
    
    இந்துமாகடல் அரசியலும் ஈழத் தமிழர் அரசியலும் 2 நாட்கள் முன்
 
    
    77 பந்தில் சதமடித்த 22 வயது வீராங்கனை! உலகக்கிண்ண அரையிறுதியில் சாதனை..திணறும் இந்திய அணி News Lankasri
 
    
    பிக் பாஸ் குரலுக்கு சொந்தக்காரர்.. வைல்டு கார்டு என்ட்ரி நடிகர் அமித் பார்கவ் பற்றி இது தெரியுமா Cineulagam
 
    
    சீனாவில் இருந்து அரிய பூமி கனிமங்களை இறக்குமதி செய்ய உரிமம் பெற்றுள்ள இந்திய நிறுவனங்கள் News Lankasri
 
    
     
                 
                 லங்காசிறி FM
                                லங்காசிறி FM
                             
                                             
         
     
     
     
 
 
 
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
        