ஓமானில் நிர்க்கதியாகும் இலங்கையர்களுக்கு உதவ நடவடிக்கை!
ஓமான் பொலிஸாருக்கு சிங்கள மொழியில் நேரடியாக முறைப்பாடு தெரிவிப்பதற்கு அவசர தொலைபேசி இலக்கமும் இணையத்தளமும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
இதற்கமைய மனித கடத்தல்காரர்களால் பாதிக்கப்பட்டு ஓமானில் நிர்க்கதிக்கு உள்ளாகும் இலங்கையர்களுக்கு உதவும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சும் ஓமான் அரசாங்கமும் இணைந்து இந்த திட்டத்தை நடைமுறைப்படுத்தியுள்ளன.
இலவச அழைப்பு
அதன்படி, 96 88 00 77 444 என்ற அவசர தொலைபேசி இலக்கத்தின் ஊடாக இலவச அழைப்புகளை மேற்கொள்ள முடியும் என கூறப்பட்டுள்ளது.

மேலும், www.nccht.com என்ற இணையத்தளத்திற்கு பிரவேசித்தும் முறைப்பாடுகளை பதிவு செய்ய முடியும் என வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.
முதல் நாளிலேயே மாஸ் வசூல் வேட்டை செய்துள்ள பிரதீப்பில் லவ் இன்சூரன்ஸ் கம்பெனி... செம கலெக்ஷன் Cineulagam
மாகாபா, புகழ், கானா வினோத் மீது போலீஸில் புகார் அளித்த Watermelon திவாகர்... ரகளையான CWC செட் Cineulagam
கடைசி நேரத்தில் தேர்தலில் நடந்த மாற்றம், வெற்றியை தட்டித் தூக்கிய மீனா... சிறகடிக்க ஆசை சூப்பர் எபிசோட் Cineulagam
அடுத்த சில வாரங்களுக்குள்... ஈரானுக்கு சீனாவின் பேருதவி: அமெரிக்க உளவுத்துறை வெளிப்படை News Lankasri