500 இலங்கையர்களுக்கு லண்டன் வழங்கும் அரிய வாய்ப்பு
இலங்கையிலுள்ள அழகுக்கலை நிபுணர்கள் 500 பேருக்கு லண்டன் பல்கலைக்கழகத்துடன் இணைந்த பாடநெறிகளை தொடர்வதற்கான வாய்ப்பு வழங்கப்படவுள்ளது.
குறித்த தீர்மானம் தீர்மானம் தொடர்பில் கல்வி இராஜாங்க அமைச்சர் பியல் நிஷாந்த அறிவிப்பொன்றை விடுத்துள்ளார்.
அழகுத்தறையுடன் தொடர்புடைய பிரித்தானிய பிரதிநிதிகள் குழுவுடன் மேற்கொண்ட கலந்துரையாடலின் பின்னரே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
சுமார் 100 மில்லியனுக்கும் அதிக பெறுமதிகொண்ட இப்பாடநெறியினை அழகுத்துறையுடன் தொடர்புடைய 4 பிரிவுகளின் கீழ் தொடரலாமெனவும் சர்வதேச அங்கீகாரம் கொண்ட இப்பாடநெறியில் பிரித்தானிய விரிவுரையாளர்களிடம் சிங்களமொழிபெயர்ப்பு மூலமான விரிவுரைகளையும் பெற்றுக்கொள்ள ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.
உலக கோப்பை கால்பந்து: போட்டிக்கு பிறகு உடை மாற்றும் அறையில் ஈரான் வீரர்கள் விட்டுச் சென்ற கடிதம் News Lankasri
வசூல் வேட்டையில் சமந்தாவின் 'எங்கள் தங்கம்' திரைப்படம்.. 3 நாட்கள் பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட் Cineulagam