யாழில் கோவிட் பராமரிப்பு நிலையம் திறந்து வைப்பு
யாழ். தென்மராட்சி நாவற்குழியில் கோவிட் தொற்றாளர்களைப் பராமரிப்பதற்கான "இடைநிலை பராமரிப்பு நிலையம்" இன்று திறந்து வைக்கப்பட்டது.
யாழ்.நாவற்குழியில் அமைந்திருந்த அரச உணவுக் களஞ்சியத்தின் ஒரு பகுதியே இராணுவத்தினரின் பங்களிப்புடன் இடைநிலை பராமரிப்பு நிலையமாக மாற்றியமைக்கப்பட்டுள்ளது.
200 படுக்கைகளைக் கொண்ட சுகாதார வசதிகளுடன் கூடியதாக இந்த இடைநிலை பராமரிப்பு நிலையம் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த நிகழ்வில், யாழ்.மாவட்ட கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் பிரியந்த பெரேரா, யாழ்.மாவட்ட அரச அதிபர் க.மகேசன், வட மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரன், யாழ்.போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் எஸ்.ஸ்ரீபவானந்தராஜா உட்பட பலரும் கலந்து கொண்டனர்.