வவுனியாவில் புதிய பொலிஸ் நிலையங்கள் திறந்து வைப்பு
வவுனியா - சிதம்பரபுரம், நெளுக்குளம் பகுதிகளில் அமைந்துள்ள பொலிஸ் காவலரண்கள் இரண்டும் பொலிஸ் நிலையங்களாக தரமுயர்த்தப்பட்டு இன்று மக்கள் பாவனைக்காகத் திறந்து வைக்கப்பட்டுள்ளன.
பொது மக்கள் முறைப்பாடுகள் வழங்கும் செயல்முறையை இலகுவாக்குவதற்காக நாடு முழுவதும் 197 புதிய பொலிஸ் நிலையங்கள் அமைக்கப்படும் என்று பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ரியல் அட்மிரல் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.
இதனடிப்படையில் வவுனியா - சிதம்பரபுரம் மற்றும் நெளுக்குளம் பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள பொலிஸ் காவலரண்களை பொலிஸ் நிலையங்களாக தரமுயர்த்தும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன.
இந்நிலையில் முதன்மை அதிதியாகக் கலந்து கொண்டு வட மாகாண சிரேஷ்ட பொலிஸ் மா அதிபர் சஞ்சீவ தர்ம ரத்தின பொலிஸ் நிலையங்களை உத்தியோகபூர்வமாக திறந்து வைத்துள்ளார்.
இதில் வன்னி மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபர் லால் செனவிரத்தின, பொலிஸ் அத்தியட்சகர் திஸ்சலால் சில்வா, வவுனியா தலைமை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மானவடு உட்பட பொலிஸ் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டிருந்தனர்.




அடுத்தடுத்த கேள்விகள் கேட்ட கோமதி, அதிரடி முடிவு எடுத்த பாண்டியன்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் Cineulagam
பிரச்சனைகளுக்கு இடையில் ஒன்றாக இணைந்துள்ள மீனா, ஸ்ருதி, ரோஹினி... என்ன விஷயம், சிறகடிக்க ஆசை சீரியல் வீடியோ Cineulagam
அந்த மாதிரி விஷயங்களில் நான் சிக்க விரும்பவில்லை... பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் நடிகர் ஓபன் டாக் Cineulagam
ஈரானில் இருந்து அமெரிக்க படைகள் வெளியேறும்: போர் இறுதிக் கட்டத்தை எட்டி விட்டதாக டிரம்ப் அறிவிப்பு News Lankasri