வவுனியாவில் புதிய பொலிஸ் நிலையங்கள் திறந்து வைப்பு
வவுனியா - சிதம்பரபுரம், நெளுக்குளம் பகுதிகளில் அமைந்துள்ள பொலிஸ் காவலரண்கள் இரண்டும் பொலிஸ் நிலையங்களாக தரமுயர்த்தப்பட்டு இன்று மக்கள் பாவனைக்காகத் திறந்து வைக்கப்பட்டுள்ளன.
பொது மக்கள் முறைப்பாடுகள் வழங்கும் செயல்முறையை இலகுவாக்குவதற்காக நாடு முழுவதும் 197 புதிய பொலிஸ் நிலையங்கள் அமைக்கப்படும் என்று பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ரியல் அட்மிரல் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.
இதனடிப்படையில் வவுனியா - சிதம்பரபுரம் மற்றும் நெளுக்குளம் பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள பொலிஸ் காவலரண்களை பொலிஸ் நிலையங்களாக தரமுயர்த்தும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன.
இந்நிலையில் முதன்மை அதிதியாகக் கலந்து கொண்டு வட மாகாண சிரேஷ்ட பொலிஸ் மா அதிபர் சஞ்சீவ தர்ம ரத்தின பொலிஸ் நிலையங்களை உத்தியோகபூர்வமாக திறந்து வைத்துள்ளார்.
இதில் வன்னி மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபர் லால் செனவிரத்தின, பொலிஸ் அத்தியட்சகர் திஸ்சலால் சில்வா, வவுனியா தலைமை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மானவடு உட்பட பொலிஸ் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டிருந்தனர்.




இந்தியாவிற்கு புறப்படவிருந்த ஈரானிய சரக்கு விமானம் மீது வான்வழித் தாக்குதல் நடத்திய அமெரிக்கா News Lankasri
அசையா சொத்து மட்டும் ரூ.404 கோடி.. நடிகர் விஜய் வேட்பு மனுவில் குறிப்பிட்ட முழு சொத்து விவரம் Cineulagam
அப்பா, மனைவிக்கு கோடிக்கணக்கில் கடன்: தவெக தலைவர் விஜய்யின் முழு சொத்து மதிப்பு விவரம் News Lankasri