இலங்கையில் 10 லட்சம் மக்களுக்கு 15 நீதிபதிகள் மட்டுமே கடமையில் உள்ளனர் - நீதியமைச்சர் அலி சாப்ரி
இலங்கையில் 10 லட்சம் மக்களுக்கு 15 நீதிபதிகள் மட்டுமே கடமையில் இருப்பதாக நீதியமைச்சர் அலி சாப்ரி தெரிவித்துள்ளார். தற்போது நடைபெற்று வரும் நீதிமன்ற வழக்குகளைக் கையாள முழு நாட்டிலும் 378 நீதிபதிகள் மட்டுமே உள்ளனர் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பாதிக்கப்பட்டவர்களைப் பாதுகாப்பதன் முக்கியத்துவம் தொடர்பான கருத்தரங்கு ஒன்றிலேயே அவர் இந்தக்கருத்தை அவர் வெளியிட்டார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், வளர்ந்த நாடுகளில் 10 லட்சம் மக்களுக்கு 200 நீதிபதிகள் உள்ளனர்.
நடுத்தர வருமான நாடுகளில் 10 லட்சம் மக்களுக்கு 65 முதல் 70 நீதிபதிகள் உள்ளனர்.
தற்போதைய சட்ட அமைப்பின்படி ஒரு வழக்கை முடிக்க 10 ஆண்டுகள் செல்லும்.
மாவட்ட நீதிமன்றங்களில் கிட்டத்தட்ட 5000 வழக்குகள் நிலுவைகளில் உள்ளன, அவை 20ஆண்டுகளுக்கும் மேலாக எந்தவொரு முடிவும் இல்லாமல் உள்ளன என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
வளைகுடாப் போரில் அமெரிக்க அரசியலமைப்பின் தாக்கம்..! 17 மணி நேரம் முன்
கனடாவில் இலங்கைத் தமிழர்கள் மூவர் விபத்தில் கொல்லப்பட்ட வழக்கு: அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள தீர்ப்பு News Lankasri
12 மாதங்களின் பின் மேஷத்தில் உருவாகும் புதாதித்ய ராஜயோகம்: இந்த ராசியினருக்கு பொற்காலம் ஆரம்பம் Manithan