இணையம் மூலம் வேலைவாய்ப்புகளை வழங்குவதாக மோசடி - மக்களுக்கு எச்சரிக்கை
இணையம் மூலம் வேலைவாய்ப்புகளை வழங்குவதாக உறுதியளித்து மோசடி செய்யும் சம்பவங்கள் அதிகரித்துள்ளமையினால் அவதானமாக செயற்படுமாறு மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய, 260750 ரூபாய் மோசடி செய்த சம்பவம் குறித்து உடனடியாக விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.
விசாரணைகளின் முடிவுகளை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு கொழும்பு தலைமை நீதவான் அசங்க எஸ். போதரகம நேற்று குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு உத்தரவிட்டார்.
குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முறைப்பாடு
தெல்கொட பகுதியைச் சேர்ந்த ஒருவர் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் தாக்கல் செய்த முறைப்பாடு தொடர்பான தகவல்களை பரிசீலித்த பின்னர் நீதவான் இந்த உத்தரவை பிறப்பித்தார்.

குற்றப் புலனாய்வுத் திணைக்களம் சார்பாக நீதிமன்றத்தில் ஆஜரான விசாரணை அதிகாரி, இணையம் மூலம் கூடுதல் வேலைவாய்ப்புகள் மூலம் பணம் சம்பாதிப்பதாக உறுதியளித்து பணம் மோசடி செய்யப்பட்டதாக முறைப்பாடு செய்துள்ளார்.
சம்பவம் குறித்து மேலும் விசாரணைகள் நடத்தப்படும் என்றும், சந்தேக நபர்களைக் கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் விசாரணை அதிகாரி நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
 
    
     
    
     
    
     
    
     
        
    
    இந்துமாகடல் அரசியலும் ஈழத் தமிழர் அரசியலும் 2 நாட்கள் முன்
 
    
    77 பந்தில் சதமடித்த 22 வயது வீராங்கனை! உலகக்கிண்ண அரையிறுதியில் சாதனை..திணறும் இந்திய அணி News Lankasri
 
    
     
                 
                 லங்காசிறி FM
                                லங்காசிறி FM
                             
                                             
         
 
 
 
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
        