யாழில் தொடரும் வழிப்பறி கொள்ளை: அசமந்த போக்கில் பொலிஸார்
யாழ்.சண்டிலிப்பாய் - சங்கானை இடையே வழிப்பறி கொள்ளையில் ஈடுபடும் கும்பல் தொடர்பில் மானிப்பாய் பொலிஸாருக்கு முறைப்பாடு வழங்கியும் நடவடிக்கை இல்லை என்று விசனம் வெளியிடப்பட்டுள்ளது.
காரைநகர் - யாழ்ப்பாணம் முதன்மை வீதியில் சங்கானைக்கும் சண்டிலிப்பாய்க்கும் இடையே இந்த வழிப்பறி கொள்ளை சம்பவங்கள் அண்மைய நாள்களில் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
குறிப்பாக முச்சக்கர வண்டியில் நேற்றுமுன்தினம் (02.11.2023) பயணித்த அரிசி ஆலை உரிமையாளரை மறித்த மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் அவரைத் தாக்கிவிட்டு கழுத்திலிருந்த சங்கிலியை அபகரித்துத் தப்பிச்சென்றுள்ளனர்.
பொலிஸாரிடம் வழங்கபட்ட முறைப்பாடு
வங்கியில் பணம் வைப்பிலிடுவதற்கு சென்ற போதே இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இது மட்டுமன்றி பெண் ஒருவர் உட்பட மேலும் பலரிடம் குறித்த பகுதியில் வழிப்பறி கொள்ளை இடம்பெற்றுள்ளது.
இந்நிலையில் அவை தொடர்பில் முறைப்பாடுகள் வழங்கப்பட்டும் சம்பவத்துடன் தொடர்புடையவர்களின் அடையாளங்களை வழங்கிய போதும் மானிப்பாய் பொலிஸார் நடவடிக்கை எடுக்கவில்லை என விசனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தக் லைஃப் படத்தில் சிம்பு ரோலில் முதன் முதலில் நடிக்கவிருந்த நடிகர் யார் தெரியுமா! அட இவரா Cineulagam

அமெரிக்காவின் F-47, சீனாவின் J-35, ரஷ்யாவின் Su-57... உலகின் மிகவும் மேம்பட்ட போர் விமானம் எது? News Lankasri

மருத்துவமனையில் ஏற்பட்ட சம்பவம், சீதாவை நினைக்கும் முத்து, என்ன ஆனது?.. சிறகடிக்க ஆசை புரொமோ Cineulagam

அமெரிக்கா, சீனாவின் மேலாதிக்கத்திற்கு அச்சுறுத்தல்: 3.5 பில்லியன் தங்கம் டெபாசிட் கண்டுபிடிக்கப்பட்ட நாடு News Lankasri

சர்ச்சைகளுக்கு நடுவில் குட் நியூஸ் சொன்ன ரவிமோகன்.. ஆடிப்போன திரையுலகம்- குவியும் வாழ்த்துக்கள் Manithan
