கொழும்பு கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து வசமாக சிக்கிய முல்லைத்தீவு நபர்
கொழும்பு கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து நேற்றைய தினம் நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மற்றுமொருவரின் கடவுச்சீட்டை பயன்படுத்தி கட்டார் ஊடாக இத்தாலி நோக்கி பயணிக்க முயன்ற சந்தர்ப்பத்திலேயே இவர் வசமாக சிக்கியுள்ளதாக தெரியவருகிறது.
குறித்த நபர் சந்தேகத்திடமான முறையில் செயற்பட்ட நிலையில் அவரிடம் குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்கள அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
இந்த சந்தர்ப்பத்தில் சந்தேகநபர் இத்தாலி கடவுச்சீட்டை காட்டியதை தொடர்ந்து அவரிடம் அதிகாரிகள் இத்தாலி மொழியில் கேள்வி எழுப்பியுள்ளனர்.
எனினும் சந்தேகநபரால் அதற்கு பதிலளிக்க முடியாமல் போயுள்ள நிலையில், அவரிடம் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் இலங்கை கடவுச்சீட்டு கைப்பற்றப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும் சம்பவம் தொடர்பில் முல்லைத்தீவு - யோகப்புரம் பகுதியை சேர்ந்த 32 வயதான ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
பிரித்தானிய பள்ளியில் நடந்த கத்திக்குத்து தாக்குதல்: 14 வயது சிறுமி மீது மூன்று கொலை வழக்குப்பதிவு News Lankasri
பிரித்தானியாவை விட்டு வெளியேற உத்தரவிடப்பட்டுள்ள இலங்கையர்: கர்ப்பிணி மனைவியின் அச்சம் News Lankasri
90 வயதை தொடவிருக்கும் நடிகர் வெண்ணிற ஆடை மூர்த்தி.. தள்ளாடும் வயதிலும் எப்படி ஆரோக்கியமாக இருக்கிறார் தெரியுமா? இதோ அந்த ரகசியம் Cineulagam