இலங்கைக்கு அடுத்த மாதம் கிடைக்கும் ஒரு மில்லியன் தடுப்பூசிகள்
உலக சுகாதார அமைப்பின் "கோவாக்ஸ்" வசதி மூலம் இலங்கைக்கு அடுத்த மாதம் ஒரு மில்லியன் குப்பிகள் மொடர்னா கோவிட் -19 தடுப்பூசிகள் கிடைக்கும் என அரசாங்கம் அறிவித்துள்ளது.
இதற்கான உறுதிப்படுத்தல் நேற்று மாலை கிடைத்ததாக, உற்பத்தி மற்றும் மருந்து ஒழுங்குமுறை அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜெயசுமன தெரிவித்துள்ளார்.
மொடர்னா, தடுப்பூசி அமெரிக்காவின் பயோமெடிக்கல் மேம்பட்ட ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு ஆணையம் ஆகியவற்றின் தயாரிப்பாகும்.
இந்த மொடர்னா தடுப்பூசி கிடைத்ததும், அவசரகால பயன்பாட்டிற்காக உலக சுகாதார நிறுவனத்தினால் அங்கீகரிக்கப்பட்ட அனைத்து உலகளாவிய தடுப்பூசிகளையும் பெற்ற நாடாக இலங்கை அமையும்.
உலகளாவிய தடுப்பூசி ஒத்துழைப்பின் ஒரு பகுதியாக இந்த தடுப்பூசி அளவை அமெரிக்கா கோவாக்ஸ் மூலம் அனுப்புவதாக அமைச்சர் கூறியுள்ளார்.
இதேவேளை இலங்கைக்கு நேரடி நன்கொடையாக அமெரிக்காவிலிருந்து மற்றொரு தடுப்பூசி தொகுதி கிடைக்கவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

தாஸ் படத்தில் ரவி மோகன் ஜோடியாக நடித்த நடிகையை நினைவு இருக்கா! இப்போது எப்படி இருக்கிறார் தெரியுமா Cineulagam

அதிரடியில் இறங்கிய ஆனந்தி.. உண்மையை எப்படி கண்டுபிடித்தார் பாருங்க! சிங்கப்பெண்ணே நாளைய ப்ரோமோ Cineulagam

Brain Teaser Maths: இடது மூளை ஆற்றல் கொண்டவரால் மட்டுமே புதிரை தீர்க்க முடியும் உங்களால் முடியுமா? Manithan

பல்லவன்-பாண்டியன் கதறி அழுது நிலாவிடம் வைக்கும் வேண்டுகோள், அவரின் முடிவு என்ன?.. அய்யனார் துணை சீரியல் Cineulagam
